சமையலில் செய்யக்கூடாதவை |
![]() |
Saturday, 17 February 2018 08:55 | |||
சமையலில் செய்யக்கூடாதவை o ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. o காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. o மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. o கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. o காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. o சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. o தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
o பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. o பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. o தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. o குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. o குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
|