பழமொழிகள் 101 |
![]() |
Saturday, 03 September 2011 06:48 | |||
பழமொழிகள் 101 o அகத்தினழகு முகத்தில் தெரியும். o அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. o அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். o அடியாத மாடு படியாது. o அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது. o அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். o அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். o அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும். o அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. o அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
o அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன. o அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள். o ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். o ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம். o ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். o ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற. o ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. o ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. o ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை. o ஆழம் தெரியாமல் காலை விடாதே.
o ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை. o ஆறிலும் சாவு நூறிலும் சாவு. o ஆனைக்கும் அடிசறுக்கும். o இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான். o இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை. o உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. o உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? o எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம். o எறும்பூரக் கல்லும் தேயும். o ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
o ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். o கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. o கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல். o கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா? o கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். o கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல. o கழுதை அறியுமா கற்பூர வாசனை? o காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. o காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல். o காகம் திட்டி மாடு சாகாது.
o காய்த்த மரம்தான் கல்லடிபடும். o காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல். o காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். o கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? o குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு. o குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். o குரைக்கிற நாய் கடிக்காது. o கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு. o கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல். o கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
o கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம். o சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல. o சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது. o சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். o தடியெடுத்தவன் தண்டக்காரன். o தம்பியுள்ளான் படைக்கஞ்சான். o தன் வினை தன்னைச் சுடும். o தனிமரம் தோப்பாகாது. o தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு. o தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
o தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன. o நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான். o நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. o நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். o நிறைகுடம் தளும்பாது. o பசி வந்தால் பத்தும் பறந்திடும். o பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். o பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. o பனை மரத்தடியில் பால் குடித்தது போல. o பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
o பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல். o புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான். o புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது. o பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும். o பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார். o போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. o மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். o மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம். o மின்னுவதெல்லாம் பொன்னல்ல. o முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
o முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல. o முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும். o மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல். o யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். o யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. o விரலுக்குத் தக்கதே வீக்கம். o விளையும் பயிரை முளையிலே தெரியும். o வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். o வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். o வெளுத்ததெல்லாம் பாலல்ல.
o பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். o பூவிற்றகாசு மணக்குமா? o பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம். o பேராசை பெருநட்டம். o பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது o வேலிக்கு ஓணான் சாட்சி. o ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம். o கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை. o சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல். o தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான். o சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
|