
மழலை மொழி
மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
இனிய மொழி என் சின்னக் குழந்தைகளின் மழலை மொழி!
இலக்கியம் இல்லா இன்னிசை! இலக்கணமற்ற தேன் மழை! அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை!
எல்லோரும் விரும்பும் கவிதை அது – சின்னஞ் சிறுசுகளின் சிங்காரச் சரிதை!
ஆக்கங்கள் அனைத்திலும் களிப்புக்களுண்டு. களிப்புக்கேயுறிய ஆக்கம்தானே கண்மனிகளின் கவிதைகள்!
மரபுக் கவிதையுமன்று – அவை பூரிக்க வைக்கும் புதுக் கவிதையுமன்று! சின்னஞ் சிறுசுகளின் சிறிப்புக்கள் இன்பம் தரும் இயற்கைக் கவிதை!
அர்த்தமற்ற அந்த வார்த்தைகளுக்கு அவரவர்கள் தரும் அர்த்தங்கள் பேஷ்..! பேஷ்!
மழலை மொழி பேச எனக்கும் ஆசைதான் – ஆனால் நீங்கள் ஏற்கமாட்டீர்கள்! ஏசுவீர்கள், ஏளனம் பேசுவீர்கள் ஏனக்கேனிந்த வம்பு.
அதோ ஒரு குழந்தை அழுகின்றது அது – சின்னக் குழந்தையின் சினுக்கள் கீதம்!
அவன் சிரிப்பு சில்லறைக் காசுகளாய் உதிரும் போதெல்லாம் – என் கவலைகளும் உதிர்ந்து போகும்!
மழலைச் செல்வத்துக்காய் ஏங்கும் இதயங்கள் ஏராளம்.
source: http://suvanathendral.com/portal/?p=49
|