இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது |
![]() |
![]() |
![]() |
Friday, 22 March 2013 15:32 | |||
இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ [ ''வலிமார்களின் ஆன்மாக்கள் ஆஜராகின்றன - நம் கோரிக்கையை அறிகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் காஃபிராகி விடுவார்'' என ''பஸாஸியா'' எனும் ஹனஃபி ஃபத்வா கிதாபில் உள்ளது.] மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்திக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி பெறுவதும் ஆகுமான செயலாகும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலில், அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும். அது ''துஆ''வாகும். ''துஆ'' இபாதத் ஆகும். இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. இறைத்தூதர்களையும், இறைநேசர்களையும் அழைத்து அவர்களிடம் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும். எங்கிருநது யார் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேருடைய வேண்டுதலையும், ஒரே நேரத்தில் கேட்கும் சக்தியும், அதை அறியும் ஆற்றலும் அல்லாஹ்வின் பண்பாகும். இந்த பண்பில் அல்லாஹ்வுக்கு கூட்டாக எவரை ஆக்கினாலும் அது அந்த பண்பில் அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைத்ததாக ஆகிவிடும். இறந்துவிட்ட நல்லடியார்கள் தங்களை யார் எங்கிருந்து அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கிறார்கள் என்று நம்புவது ஈமானை பறித்துவிடும். ஏனென்றால் ஆற்றல் அல்லாஹ்வுக்க மட்டுமே சொந்தமானது. ''வலிமார்களின் ஆன்மாக்கள் ஆஜராகின்றன - நம் கோரிக்கையை அறிகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் காஃபிராகி விடுவார்'' என பஸாஸியா எனும் ஹனஃபி ஃபத்வா கிதாபில் உள்ளது. மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ ஜமா அத்துல் உலமா மாத இதழ் - ஏப்ரல் 2010
|