கண்ணீர்க் கால்வாய்! |
![]() |
![]() |
![]() |
Saturday, 21 April 2012 06:42 | |||
கண்ணீர்க் கால்வாய்! சிலர் அழுதால் கண்ணீர் ஆறாக ஓடும். அவ்வளவு கண்ணீர் உடலுக்குள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா.....? கண்ணீர் தினமும் உற்பத்தியாகிறது. ஆனால் தினமும் வெளியேறுவதில்லை. அது கண்களை சுத்தபடுத்துகிறது. எஞ்சிய கண்ணீர் எங்கே செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? முக்குதான் கண்ணீர் செல்லும் கால்வாயாகும். சாதாரண நேரங்களில் குறைந்த அளவில் கண்ணீர் முக்கின் வழியாக வழிந்து ஆவியாகி விடுவதால் தெரிவதில்லை. துக்க வீட்டில் பெண்கள் அழும்போது அடிக்கடி முக்கை பிடித்துக் கொள்வதை பார்த்திருக்கலாம். அப்போது முக்கின் வழியாக வருவது கண்ணீரின் ஒரு பகுதிதான். கண்களுக்கு முக்குடன் இணைப்பு துவாரங்கள் இருக்கின்றன. இது கண்ணீரோடை போல செயல்படுகிறது.
* யானைகள் எலிபண்டிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. * யானைகளின் முன்னங்கால்கள் வட்டவடிவிலும், பின்னங்கால்கள் நீள் வடிவிலும் காணப்படுகின்றது. * ஓர் ஆண் யானையின் மொத்த எடை சுமார் 5000 கிலோவாக இருக்கும். * யானைகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை நடக்கும் ஆற்றலுடையது. * யானையின் துதிக்கையினுள் ஒரே நேரத்தில் சுமார் 9 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். * யானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது. * யானையின் துதிக்கை 100 கிலோ எடைப்பொருளை தூக்கவல்லது. * யானை ஒருநாளில் சுமார் 300 கிலோ எடையுள்ள தாவர உணவுகளை உண்ணுகின்றன. * பூமிகளில் வாழும் பாலூட்டிகளில் யானையே மிகப்பெரிய பாலூட்டியாகும். * விலங்கு இனத்தில் யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் அமைந்துள்ளன. * விலங்கு இனத்தில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது. * யானையின் தந்தங்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. * யானையின் கால்களின் கீழ்ப்புறம் நமக்கு இருப்பதைப் போலவே ரேகைகள் அமைந்துள்ளன. * யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள். * யானைகள் சராசரியாக 70 வருடங்கள் வரை வாழ்கின்றன.
|