Saturday, 04 June 2016 06:43 |

சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்
[ இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் ]
“வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது.
அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
சாலை விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் எவ்வளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துகளை தடுக்கமுடியாது.
|
Read more...
|
Thursday, 08 May 2014 06:06 |

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை!
நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல் இல்லையேல் சாதல்!
நாய்களுக்கு உணவு வகைகளை உற்பத்தி செய்யும் பெடிக்ரீக்கு நாய்கள் மீது உண்மையான அக்கறையா என்ன?
தனி நபர் நுகர்வு என்பது ஒரு வெறி பிடித்த நுகர்வாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லவே இது போன்ற சொல்லாடல்களை நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு எது நன்றாக இருக்கும் என்பதை அப்பொருளின் உபயோக விளைவைப் பார்த்து தெரிவு செய்யும் நிலையில் இருந்து, விளம்பரங்களில் போடுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர் என்பதனாலேயே இதை ஒரு வெறி என்று சொல்லுகிறோம்.
இந்தியாவில் இத்தகைய நுகர்வு சந்தைகள், அனைத்து மக்களையும் கவரும் விதமாக மாறி வருவதற்கு ஊடகங்கள் செய்யும் நயவஞ்சக விளம்பரங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன, சமீப காலங்களில் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளிலும் இது போன்ற விஷம விளம்பரங்களின் ஆதிக்கம் என்பது நடுத்தர வர்க்க மக்கள் மட்டும் அல்லாமல் குடிசை வீடுகளையும் ஆட்டிவைக்கத் தொடங்கிவிட்டது. வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி ஒன்று ”கடன் வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்” என்று விளம்பரம் செய்கிறது.
மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவையை மீறி அதிகமாக கடன் வாங்குவதும், திருப்பி அடைக்கும் திறன் இல்லாவிட்டால் கூட கடன் வாங்குவது என்பது வருத்தப்படக் கூடிய ஒன்றல்ல என்பது போன்ற மாயையை இத்தகைய விளம்பரங்கள் உருவாக்குகிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்பதெல்லாம் போய் நிச்சயமாகப் பரிசு உண்டு!, இங்கு வாங்கினால் உங்கள் பணத்தை சேமிக்கலாம்! போன்ற விளம்பரங்கள் ஏழைப் பாழைகளை வசீகரிக்கும் சொற்களாகிவிட்டன.
இது ஏதோ நம் மீதான கரிசனத்தில் அல்ல, அவனது பொருளை வாங்க வைத்து மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கான ஆசைகளைத் தூண்டுவதற்கே என்பதை மக்கள் உணர்வதில்லை. இது மட்டுமல்லாமல் நேர்த்தியான, கவர்ச்சியான பேக்கிங்குகள் கொண்டு விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே சுத்தமாகவும், உடம்பிற்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும் என்று அவர்களை அறியாமலேயே மனதில் பதிய வைக்கப்படுகின்றன.
|
Read more...
|
Monday, 26 December 2016 07:45 |

அமுதத்தை நஞ்சாக்கும் அணுகுமுறை!
பேராசிரியர், ஜெ. ஹாஜாகனி
மதப் பரப்புரைகளையும், அதற்கெதிரான நெருப்புரைகளையும் மையமாக வைத்து, தாய் மண்ணின் அமைதியும், தனிமனித அமைதியும் குலைக்கப்பட்டு வரும் காலத்தில், சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய செய்திகள் பலவுண்டு.
இந்தியாவின் அரசியல் சாசனம் உன்னதமான கூறுகள் பலவற்றைத் தன்னகத்தில் கொண்டுள்ளதால், மண்ணகத்தில் சிறந்த அரசியல் சாசனமாய்ப் போற்றப்படுகிறது.
இது இந்தியர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமம் என்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டுரிமை ஆகியவற்றை எல்லார்க்கும் சமமாக வழங்கியுள்ளது.
ஒருவர் தான் விரும்பிய சமயத்தை, ஏற்க, பின்பற்ற, பரப்ப உள்ள உரிமையை (To Profess, To practice, To propagate) அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமாகவே தந்துள்ளது. அதே நேரம், பொது ஒழுங்குக்கும், சமூக அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இவை அமைய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது,
|
Read more...
|
Monday, 28 April 2014 09:41 |

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை
[ உணவு உண்ணும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய விழிப்புணர்வுக் கட்டுரை ]
[ மரபணு மாற்று, உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும். மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும். ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும். பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை, நிலக்கடலை, தக்காளி, சோளம், கடுகு, நெல், உருளைக் கிழங்கு, வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய், புற்று நோய், ஆண் மலடு, நரம்புக் கோளாறு, சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.
இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை. உயிர் இல்லா இயற்கை, உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம். அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம். பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.
ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும், ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை. போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.]
|
Read more...
|
Monday, 15 February 2016 08:49 |

ஜனாஸாவும் இன்றைய முஸ்லிம்களும்!
உண்மை முஸ்லிம் ஜனாஸா தொழுகைக்கான சட்டங்களையும் அதில் ஓதப்பட வேண்டிய நபிவழி துஆக்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஜனாஸா தொழுகை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்னும் நம்மிடத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. வந்தாலும் அதை தடுப்பதற்கு சிலர் தயாராக இருக்கிறார்கள். இன்னும் பிடிவாதம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஊர் வழக்கம் என்று சொல்லிக் கொண்டு, நபிவழிக்கு மாற்றமாகத்தான் நடந்து கொண்டியிருக்கிறது.
உண்மை முஸ்லிம் சமூகத்தில் நிகழும் மரணங்களின்போது பங்கெடுத்துக் கொண்டு கப்ருவரை பின்தொடர வேண்டும். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தினார்கள். ''முஸ்லிமின் மீது மற்ற முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து. ஸலாமுக்கு பதிலுரைத்தல் , நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவை பின்தொடர்தல், அழைப்பை ஏற்றல், தும்மியவருக்கு (அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னால் 'யர்ஹமுகல்லாஹ்') பதிலளித்தல். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஒருவர் இறந்துவிட்டால், அந்த வீட்டார்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்பதை நமக்கு நபிமொழி அறிவிக்கிறது.
|
Read more...
|
Sunday, 26 October 2014 17:39 |

திட்டமிட்டு செய்யும் துரோகம், பண்பாட்டுச் சிதைவு!
[ திரைப்படங்களில் எண்ணற்ற புரட்சி(!) செய்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் அரசுக்கு ‘காக்கா’ பிடிப்பவர்களாகவே இருக்கின்றனர், ‘கற்பு’, தமிழ் பண்பாடு என்று வகுப்பெடுக்கும் இவர்கள் ஏன் சக நடிகையின் உடலை எந்த தார்மீக அறமுமின்றி கையாள்கிறார்கள் என்று மக்கள் இவர்களை நோக்கி கேள்விகள் எழுப்ப வேண்டும்.
மனித மனமானது உணர்ச்சி மிகுந்த புலன்களால் ஆனது என்று சொல்லவும் தேவையில்லை, அது ஒவ்வொரு புலன்களின் வாயிலாக கற்கிறது, உணர்கிறது, செயல்படுகிறது. ஒலி ஒளி என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் அதன் வாயிலாக ஏற்றிவைக்கப்படும் கருத்துக்கள் விளைவுகள் கொண்டவை என்பதற்கு மாற்று கருத்து இருந்துவிட முடியாது.
ஆண்மை பெண்மை பற்றி இவர்கள் பரப்பும் கருத்துரைகள் சமூக முன்னேற்றத்தில், சிந்தனை வளர்ச்சிப் பாதையில் முடக்காக இருக்கிறது. பெண் விடுதலைப் பாதையில் பெருத்த முட்டுக்கட்டையாக இருப்பது திரைப்படங்களே, பெண்களைப் பாலியல் பண்டமாய் பயன்படுத்தி மேலும் மேலும் பாலியல் வக்கிரங்களை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள், அது பெண்களுக்கெதிரான வன்முறையாய் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டேயிருக்கிறது.
‘தமிழ்’ பண்பாட்டின் படி ஒரு பெண் முழுக்கப் போர்த்தியவளாகவல்லவா இருக்க வேண்டும்? மேலே ஓர் அங்குலமும், கீழே ஓர் அங்குலமும் மட்டுமே உடையாக கொடுத்து பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கும் முதலாளிகளை எதிர்த்து பொதுநல அமைப்புகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன?]
|
Read more...
|
Friday, 21 August 2020 19:41 |

ஊடகக் குற்றம்!
நூருத்தீன்
சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது. 15 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனில்லை; உயிரிழந்தார்.
கனத்த இதயத்துடன் அவரது சடலத்தை அடக்கம் செய்ய அவருடைய நண்பர்கள் சிலரும் ஊழியர்களும் உரிய ஆவணத்துடன் சென்றனர். ஆனால் அச்சடலத்தைத் தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது என்று தடுத்து, ஏறக்குறைய 50 பேர் கொண்ட கும்பல் கல்லாலும் கட்டையாலும் அவர்களை அடித்துத் தாக்கியது.
உடன் சென்றிருந்த சுகாதார ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு இரத்த காயம். ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் நொறுங்கின. அவரது சடலத்தைப் போட்டுவிட்டு நண்பர்கள் தப்பித்து ஓடினர்.
இந்த கொடுந்துயர் நிகழ்வு இரண்டாவது! கடந்த வாரம் சென்னையில் கொரோனாவால் மரணமடைந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவரின் சடலத்துக்கு நேர்ந்தது முதல் அவலம்.
தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மக்கள் மறித்து, அச்சடலம் ஏரியா மாற்றி ஏரியா சுற்றியது. இவை எப்பேற்பட்ட குற்றங்கள்! மனிதாபிமானமுள்ளவர்கள் வெட்கும் குற்றங்கள்! அருவருப்பான குற்றங்கள்! ஆனால் அந்தப் பாமர மக்களின் இச்செயல்கள் ‘மன்னிக்கக் கூடாத குற்றமா’?
|
Read more...
|
Saturday, 08 February 2020 09:16 |

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்
தொகுப்பாசிரியர் - ஆளூர் அமீர் அல்தாஃப், கோயம்புத்தூர்
4 தொகுதிகள்
2800 பக்கங்கள்
1600 தலைப்புகள்
13,000 வண்ணப்படங்கள்
நான்கு பாகங்கள், 2800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 779 தலைப்புகள், 13,000 வண்ணப்படங்கள் என மாபெரும் திருக்குர்ஆன் அறிவுக்களஞ்சியத்தை அமீர் அல்தாஃப் படைத்துள்ளார்.
தமிழ், ஆங்கிந்லம் ஆகிய இரண்டு மொழிகளில் 276 நூல்கள், 21 இதழ்கள் துணையுடன் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியல், புவியியல், வானவியல், மானுடவியல், சமூகவியல், மருத்துவம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக திருக்குர்ஆன் பேசுகின்ற வியக்க வைக்கும் தகவல்களை அமீர் அல்தாஃப் மிகவும் அற்புதமாக தொகுத்தளித்திருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனங்களை கவரும் வண்ணப்படங்களுடன் விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு.
இறைத்தூதர் வரலாறு, முந்தைய சமூகத்தார் வரலாறு, நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அதிசயிக்கத்தக்க வரலாறு, பெருமானாரின் முக்கியமான கடிதங்கள், நபிமொழி களஞ்சியம், முன்னறிவிப்புகள், இஸ்லாமிய பண்பாடு, சட்டம், போர்க்டள், இறுதி நாளின் அடையாளம் முதலிய முக்கியமான அத்தியாயங்கள் இந்த கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன.
|
Read more...
|
Friday, 14 September 2018 07:28 |

தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் (நூல்)
ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை.
மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.
இந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.
இதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.
நீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.
|
Read more...
|
Sunday, 08 May 2016 06:53 |

வீரமங்கை ஜெய்னபுல் கஸ்ஸாலி
சாலிஹான பெண் என்பவள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாகவும் தன் கணவனுக்கு அன்புள்ள மனைவியாகவும் இருப்பதோடு இந்த சமூகத்திற்கும் உபயோகமுள்ள ஒரு பெண்ணாக வாழ வேணடாமா?
இன்று தமிழகத்தில் முஸ்லிம் பெண்களுக்காக போராடுவதற்காக ஆண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் தலைவர்களாவது சமூகத்திற்கு குரல் கொடுப்பதற்கு உள்ளார்களா?
ஆனால் வருடந்தோறும் 6000 பெண் ஆலிம்கள் வெளிவருகிறார்கள் எங்கே செல்கிறார்கள் இவர்கள் எல்லாம்? ஒரு ஆணிற்கு அடிமையாகவா? எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சோதனையே இல்லாமல் சுவர்க்கம் நுழைவதற்கா?
அல்லாஹ் போராடச் சொல்லியும் தீமையை தடுக்கவும் ஆண்களுக்குத் மட்டும் தான் கட்டளையிட்டுள்ளானா? பெண்களுக்கு அந்த பொறுப்புகள் இல்லையா?
|
Read more...
|
Monday, 01 May 2017 07:45 |

'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'
[ சமூக ஆர்வலர் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) அவர்கள் அவ்வப்போது இணையத்தில் எழுதிவந்த கட்டுரைகளை நூலாக தொகுத்து வெளியிட்டு வருகிறார். 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்' சகோதரர் அவர்களின் மணிமகுடமாக அமைய வாழ்த்துக்கள். இங்கு இடம்பெற்றுள்ள நூலின் தலைப்புகளே இந்நூலின் முக்கியத்துவத்தை நமக்கு பரைசாற்றுகிறது. சிறப்பான கட்டுரைகளை தாங்கிநிற்கும் இந்நூல் ஒவ்வொரு இளைஞரின் கரங்களில் இருப்பது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. -adm.N.I.]
1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை மூடுவதில்லை!
2) இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரியக் காரணமென்ன !
3) உலகம் பிறந்தது எனக்காக உண்மை மறந்தது எதற்காக!
4) ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்!
5) கருணை காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் விசுவாசிகளின் கடமை!
6) திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!
7) என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!
|
Read more...
|
Friday, 30 June 2017 11:12 |

அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது.
அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும்.
அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.
முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.
ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்..... என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே!
|
Read more...
|
Friday, 31 August 2018 07:11 |

இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்
( நூல் அறிமுகம்)
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி
இது ஒரு வித்தியாசமான நூல். இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திக்ர், துஆ என்பவற்றை ஒரு புதிய நோக்கில் முன்வைக்கிறது இந்த நூல். திக்ர், துஆ நூற்களில் இது ஒரு முன்மாதிரி ஆக்கம்.
இதற்கு முன் யாரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முற்றிலும் ஆன்மீகப் பகுதியான இவ்வாழ்வை இவ்வாறு நோக்கியதில்லை.
ஷெய்க் முஹம்மத் கஸ்ஸாலிக்கே உரிய போக்கு இது. கஸ்ஸாலி ஒரு வித்தியாசமான சிந்தனையாளர். புதிய புதிய ஆய்வுகளை அவர் எப்போதும் முன் வைத்து வந்துள்ளார். அப்படியொரு புத்தகமே இந்த நூல்.
புத்தகம் திக்ர், அவ்ராத் என்றாலும் இறை தூதரின் அற்புத வாழ்வை இந்த நூல் சொல்கிறது.
இஸ்லாத்தின் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் ஆங்காங்கே விவரிக்கிறது.
மிகவும் அழகான, கவர்ச்சிகரமான நடையைக் கொண்டவர்கள் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி. இதனை இந்த நூலில் மிகச் சிறப்பாகவே காணலாம்.
|
Read more...
|
Thursday, 13 September 2018 12:27 |

"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்" நூல் அறிமுகம்
"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்" (நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை)
வண்டலூர் மெளலானா முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் எழுதி 7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை.
*இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம்* *பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி* இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான ஆழமானதொரு தமிழ் நூலை இப்போதுதான் நான் வாசித்தேன். நூலாசிரியர் முனைவர் *மௌலானா, P.S. சையித் மஸ்வூத் ஜமாலி* அவர்களின் வாழ்நாளில் இந்த ஒரு நூலே போதும் என்று சொல்கின்ற அளவிற்கு, நூல் அற்புதமாகவும் தரமாகவும் அமைந்துள்ளது. பாராட்டுகள்!
இஸ்லாத்தில் இறைவழிபாடு, குடும்பம், சிவில், குற்றவியல், நீதி, நிர்வாகம், பொருளாதாரம்ஸ என ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட சட்டங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது இம்மார்க்கத்தின் தனிச் சிறப்பாகும். எந்தவொரு வினாவுக்கும் இங்கே விடை உண்டு. செல்லும்-செல்லாது; உண்டு-இல்லை; விரும்பத் தக்கது-தகாததுஸ எனத் தெளிவான வரையறைகள் மிகக் கவனமாக வகுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயல்பூர்வமான துறைச் சட்டங்களுடன், நம்பிக்கை சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கியதே ‘ஷரீஆ’ எனும் மார்க்க நெறியாகும். செயல்கள் தொடர்பான சட்ட விதிகளுக்கு, ‘ஃபிக்ஹ்’ என்று பெயர். இந்த வேறுபாட்டைத் தொடக்கத்திலேயே நூலாசிரியர் விவரித்துவிடுவது சிறப்பு.
|
Read more...
|
Tuesday, 16 October 2018 07:15 |

''முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்''
தமிழக முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல்
''முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்'' என்ற நூல்
நீ முஸ்லிமல்ல
அவன் முஸ்லிமல்ல
நீ காஃபிர்
நீ ஷிர்க் வாதி
நீ கிரிஸ்டினா?
யூத கைகூலியா?
|
Read more...
|
Thursday, 27 April 2017 07:48 |

"கோவை கலவரத்தில் எனது சாட்சியம்" புத்தகத்தின் தாக்கம்!
நேற்று பேருந்தில் வரும் போது நல்ல கூட்டம் கடைசி சீட்டில் எனக்காக ஒரு இடம் இருந்தது!. அமர்ந்ததும் "கோவை கலவரத்தில் எனது சாட்சியம்" புத்தகத்தை கையில் எடுத்து வாசித்து கொண்டிருக்கும் போதே அருகில் அமர்ந்திருந்த 40 வயதுமிக்க ஒருவர் மெதுவாக என்னுடன் சேர்ந்தே இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கினார்.
சரியாக, நான் பிப் 98 குண்டுவெடிப்பை நெருங்கின சமயம் அவரும் இணைகிறார். நாங்கள் இருவரும் புத்தகத்துடன் பயணப்படுகிறோம். அடுத்து சட்ட ரீதியான உதவிகள் செய்வதாக கூறும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பகுதி வந்ததும்! அந்த மனிதர் வாய்விட்டு கேட்டே விடுகிறார், "என்னப்பா ஒரே முஸ்லிம் பெயரா இருக்கு?. என்னப்பா இது பஸ்ல இதெல்லாம்"..இப்போது இன்னும் மூன்று பேரது கவனம் இந்த புத்தகத்தின் மீதும் என்மீதும்! என் பாதைக்கான தடத்தை உருவாக்கி தந்து விட்டார் என்ற சந்தோசத்தில் நானே தொடர்ந்தேன்.
நவம்பர் 97 நடந்த கலவரங்களைப் பற்றி புத்தகம் செல்லும் பாதையை எடுத்து அந்த பயணத்தின் வாசகர்களாக மூன்று பேரையும் உட்புகுத்தி அவர்கள் படிக்க ஆரம்பித்ததும்! அவர்களுக்குள் ஒரு வெறுப்பு, காவல்துறையா இது! இன்றைக்கு அர்ஜூன் சம்பத் என்ற பெயர் அவர்களுக்கு பரிட்சயமாய் இருந்தது. ஆனால்,அன்றைய அர்ஜூன் சம்பத்தின் கோர முகத்தை படித்ததும் அவர்களின் முக சுழிப்பை காண முடிந்தது.
பேருந்து கோவையிலிருந்து தான் புறப்பட்டது! புத்தகமும் கோவையை மையமாக கொண்டு தான் சுற்றுகிறது. அதனால் தான் என்னவோ எளிதாக நாங்களும் அதனுடன் இணைந்து விட்டோம். முக்கியமான பகுதிகளை அவர்களிடம் படிக்க சொல்லி விட்டு கொஞ்சம் விவாதத்தை தொடங்கினோம்.
|
Read more...
|
Sunday, 18 October 2015 08:04 |

தூண்டில் பதிப்பகத்தைத் தொடங்கிய போது, தற்போது விற்பனையில் இல்லாத சிறந்த நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் முன்மொழிந்து தொடங்கினோம். அதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. நவீன அறிவியல் வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுத்துத் துறையில் இயங்குபவர்களுக்கு தரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பிறமொழிகளில் உள்ள நல்ல நூல்கள் தமிழ்மொழியில் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ நூல்களும், தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துத் துறையில் இயங்கியவர்களுக்கு இதுபோன்ற வசதி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நூலகங்களில் செலவிட்டு, பெரும் சிரமப்பட்டு ஒவ்வொரு நூலையும் உருவாக்கித் தந்தனர். குறிப்பாக, எத்தனையோ முஸ்லிம் எழுத்தாளர்கள் வறுமையில் வாடிய நிலையிலும் நல்ல நூல்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அப்படி உருவான நூல்களில் பெரும்பாலானவை முதல் பதிப்போடு நின்று போய் இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்காமல் போன நிலை வேதனைக்குரிய விஷயமாகும்.
|
Read more...
|
Thursday, 13 February 2014 06:52 |

'இழிவான இச்சை' சிலருக்கு வாழ்வியல் இலக்காக இருக்கும் வேளையில், அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”
‘யாதும்’ – எதுவும்!
“தனது நாட்டில் நெய்யாத ஆடைகள் அணியும் தனது நாட்டில் அறுவடை செய்யாத உணவை உண்ணும் தனது தோட்டத்தில் பயிரிடப்படாத திராட்சை ரசம் அருந்தும் ஒரு நாட்டுக்காக பரிதாபப்படுங்கள். (கலீல் ஜீப்ரான் கருத்திது)
தமிழ்த் திருநாட்டின் இன்றைய சமூகம் அன்னிய ஆடையை விரும்புகிறது. அன்னிய பழங்களைச் சுவைக்கிறது. அன்னிய உணவை ருசிக்கிறது. எவரைப் பார்த்து எவர் பரிதாபப்படுவது? வினா தொடுக்க கலீல் ஜீப்ரான் இல்லை!
ஊன்று கோலை விற்று வாழும் முடவர் போன்று தம் கலாசாரத்தை விட்டும் கடந்தோடி வேற்றுத் தன்மையுடன் விளங்குவதில் பெருமை கொள்ளும் போக்கு!
தாழிடப்பட்ட உதடுகளுக்குள் கிடக்கும் சொற்கள்! தனது ஒப்புதலில்லாமல் தழுவும் தென்றலைக் கண்டு சினம் கொள்ளும் மரக்கிளைக்கு இருக்கும் இயற்கை வெறுப்பு கூட இங்கு இல்லாமல் போனது.
மாடி வீட்டை அழகாகக் கட்டி மனவீட்டை அழுக்காக்கி வைத்திருக்கும் உலகம்!
உலக உயிர்களனைத்துக்கும் உற்சாகமூட்டும் கார்முகிலாக மாற இங்கு எவர் இருக்கிறார்?
|
Read more...
|
Sunday, 26 May 2013 06:25 |

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போராட்ட முறை எது?
(சீறாவின் இயங்கியல் நூலுக்கு விடியல்வெள்ளி சஞ்சிகையில் வெளிவந்த விமர்சனம்)
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றோடு இன்றைய இயக்கங்களை ஒப்பிடும் நோக்கில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூலாகும் இது.)
ஓர் இயக்கம் நடத்தும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான பேரணியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இன்னொரு இயக்கம் நடத்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
'இஸ்லாம்தான் அரசாளும் கொள்கையாக வரவேண்டும்'எனவிரும்பும் ஒரு முஸ்லிம் இளைஞன் இந்தக்காட்சிகளைப் பார்க்கின்றான். அந்த இளைஞனின் உள்ளத்தில் இந்த இரண்டு இயக்கங்களில் எது முழுமையான இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் மட்டும் அது இஸ்லாமிய இயக்கம் என்ற வட்டத்திற்குள் வந்துவிடுமா என்று சிந்திக்கின்றான்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. எது இஸ்லாமிய இயக்கமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலாக வெளிவந்திருக்கும் நூலாக 'சீறாவின் இயங்கியல்' எனும் இந்த நூலைக் கருதலாம்.
நூலின் தலைப்பு ஒருவித கருத்து மயக்கத்தைக் கொடுத்து நேரடியாக அதன் பொருளைப் புரிந்து கொள்ளமுடியாமலாக்கினாலும் நூலின் ஆசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்களின் சுருக்கமான முன்னுரை நூலின் உள்ளடக்கத்தை சாதாரண வாசகரும் புரிந்துகொள்ளும் விதமாக எளிமையாகச் சொல்லிவிடுகிறது.
|
Read more...
|
Wednesday, 30 January 2013 07:15 |

மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், "எனது சமூகத்திலேயே ஹலால், ஹராம் பற்றிய அதிக விளக்கமுடையவர்களாக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் திகழ்கின்றார்கள்"
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். "மக்களே! சன்மார்க்க சட்ட திட்டங்களைப் பற்றி நீங்கள் எவரேனும் விளக்கம் தேடினால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள்".
இன்னொரு கட்டத்தில் "மறுமையில் சன்மார்க்க அறிஞர்கள் ஓர் அணியில் திரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் முன்னிலை வகிப்பவராக காட்சி தருவார்கள்" என்று கூறினார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கூறும் பொழுது, "எனக்குப் பின்னர் கலீஃபாவாக நான் சுயமாகவே தேர்வு செய்வதாக் இருந்தால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையே அப்பதவிக்குத் தேர்வு செய்வேன். நாளை மறுமையில் அல்லாஹ் தனது விசாரணையின்போது "நீங்கள் எந்த தகுதியை முன்னிறுத்தி கலீஃபாவாக முஆத் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை தேர்வு செய்தீர்கள்?" என்று கேட்டால், உடனே பின்வரும் பதிலைக் கூறுவேன்.
"இறைவா! உனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை மறுமையில் அறிஞர் பெருமக்கள் உனக்கு முன் அணிதிரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முன்னிலை வகிப்பவராக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களே இருப்பார்கள்' என்று கூறியிருக்கிறார்கள். அத்தகைய உயரிய தகுதியை நான் கருத்தில் கொண்டே, முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீஃபாவாக நியமித்தேன் என்ற பதிலை கூறுவேன்".
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றர்கள். "பெருங்கொண்ட சமூகம் சாதிக்க வேண்டிய காரியங்களை முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனி மனிதனாக இருந்து சாதித்துக் காட்டினார்கள். மாபெரும் மகத்துவம் மிக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவன் எவ்வாறு ஒரு சமுதாயமாக சிலாகித்து கூறுகின்றானோ அதைப் போலவே முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நாங்கள் மதித்து வந்தோம்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்; "'முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்ற ஒரு பிள்ளையை பெண்கள் பெற்றெடுக்க முடியாது. இந்த முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் இல்லையென்றால் நானே நாசமாகி இருப்பேன்.] ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன்.
|
Read more...
|
|
|