Thursday, 24 June 2010 07:20 |

இஸ்லாத்தின் பார்வையில் சிறந்தவைகள்!
o நற்செயல்களில் சிறந்தது
o உலகத்தைவிட சிறந்தது
o இறைவனிடத்தில் சிறந்தது
o சகுனத்தில் சிறந்தது
o தர்மத்தில் சிறந்தது
o செல்வத்தில் சிறந்தது
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்தவை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம்.
|
Read more...
|
Friday, 23 April 2010 10:41 |

குழந்தைகளைக் கொஞ்சுவோம்
உனது குழந்தையின் பூ முகத்தில் நீ பதிக்கின்ற முத்தங்கள் இறைவனின் அருளைப் பெற்றுத் தரும்.
[ இன்றுகுழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.
ஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.
தொழுகை, தஸ்பீஹ், திக்ர், நோன்பு ஆகிய வணக்கங்கள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தகர்த்தெறிகின்றார்கள். அதனால் தான் தொழுகை என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் நடத்துகின்ற உரையாடல் என்றிருப்பினும் குழந்தையின் அழுகைக் குரல் காதில் விழுந்து விட்டால் அதை அப்படியே சுருக்கி விட்டிருக்கின்றார்கள்.]
|
Read more...
|
Thursday, 28 January 2010 12:05 |

இஸ்லாம் - ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!
உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.
பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது!
o கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது!
o பெண் குழந்தை பிறந்தால் அது துரதிருஷ்டம் என்றும் தங்களுக்கு இழுக்கு என்றும் அவர்களை உயிருடன் புதைத்து வந்த போது! (இன்றளவும் இது சிலரிடையே தொடர்கிறது)
o உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் என கிரேக்க தத்துவம் கூறிய போது!
o பெண்களுக்கு சொத்துரிமை இல்லை! ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சில வேத வசனம் கூறுகின்ற போது! (எண்ணாகமம் 27:8)
o மனிதனின் முதல் பாவத்திற்கு காரணம் பெண்ணே எனவும் அதனால் பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (ஆதியாகமம் 3:16)
o பெற்றோர்களே தங்களின் புதல்விகளை அடிமைகளாக விற்கலாம் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (யாத்திராகமம் 21:7-8)
|
Read more...
|
Sunday, 17 October 2010 09:45 |

''வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் – அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை!''
தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்றுவதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது
நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான்!
|
Read more...
|
Friday, 17 December 2010 06:25 |

அரபு மன்னர்களும் ஈரானும் - தொடரும் துரோகம்
BNU FATHIMA
[அம்பலப்படுத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் கேபிளில் ஒன்று கூட சவூதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததாகவோ குறைந்த பட்சம் பலஸ்தீன் நாடு உருவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் கொடுக்க முனைந்ததாகவே சொல்லவில்லை.
சவூதியின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு உதாரணமாய் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக சவூதி ஆயுதங்கள் வாங்கியதை குறிப்பிடலாம். தற்போதைய சூழலுக்கு அவர்கள் அதை பயனபடுத்த போவதில்லை என்ற போதிலும் அவர்கள் வாங்குவதில் ஆர்வமாய் உள்ளனர்.
அரசின் அடிவருடிகளாக உள்ள சில அறிஞர்களோ ஷியா ஈரான் சுன்னி இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி யூத இஸ்ரேலுடன் கை கோர்த்தாவது ஈரானை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாவம் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு தலைமேயேற்க சவூதி வலுக்கட்டாயமாக மறுப்பதால் தான் அவ்வெற்றிடத்தை ஈரான் நிரப்புகிறது என்பதை மறந்து விட்டனர்.
தன் நிதி மற்றும் புனித தலங்களின் காப்பாளர் எனும் அடிப்படையில் வெகு எளிதாக முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து பலஸ்தீனை மீட்டெடுக்க சவூதியால் முடியும். ஆனால் அதன் பொருளாதரம் கூட முஸ்லீம் நாடுகளுக்கு பயன்படுவதை விட சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது என்பது தான் யதார்த்தம்.
முஸ்லீம்களின் வீழ்ச்சியின் வரலாறு உதுமானிய கிலாபத்தின் மறைவிலிருந்து தொடங்குகிறது. இன்று முஸ்லீம் நாடுகளை வழி நடத்தும் தலைமை பொறுப்புக்கு ஈரான் முனைகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் சவூதி அரேபியா ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் குறிப்பாக அரபுலகத்திற்கும் செயத தவறுகளே என உறுதிபட கூற முடியும்.]
|
Read more...
|
Monday, 22 March 2010 07:22 |

நல்ல மனைவி அமைய....
[ அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா?
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]
|
Read more...
|
Saturday, 27 March 2010 07:22 |

ரசிக்கும் உரிமை கணவனுக்கே
ஃபாத்திமா ஜொஹ்ரா
[ பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
ஒரு ஆண் குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.]
|
Read more...
|
Tuesday, 04 May 2010 09:26 |

கணவன் மனைவி உறவும் பிள்ளை வளர்ப்பும்
கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க முடியும்.
சில வீடுகளில் கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை.
சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது, அடிப்பது, சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள்.மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர் ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில் தாயின் மரியாதையை குறைத்து விடும்.
மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள் பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள். அதாவது,''நான் இல்லாத போது அம்மா என்ன செய்யறான்னு'' எனக்கு சொல்லணும். சொன்னாநான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று சொல்வார்கள். இது மிக மிகத் தவறு. இப்படிப்பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின் எதிர் காலம் என்னவாகும். மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள்.
பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால் சில சமயங்களில் பிள்ளையை காக்க தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல் இருந்து விடுவாள்.
''அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க. அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு'' சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்டபிள்ளையல்ல''.
|
Read more...
|
Thursday, 26 February 2009 07:34 |

கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்
An Excellent & An Useful Article
ரெஹனா பானு மாஸ்கோ
திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு. ஜாலி கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதுவே இந்தக் கட்டுரை.
திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.
|
Read more...
|
Saturday, 13 March 2010 08:28 |

ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.
ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர். சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.
தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து வெள்ளைக்கொடி பறக்குமே!தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா? என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி விடும்.
கல்யாண வாழ்க்கையைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்;
காரில் தன் மனைவியுடன் வந்திறங்கும் ஒருவன் ஓடிப்போய் தன் மனைவிக்காக கார் கதவை பவ்யமாகத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் ஒன்று, அவள் மனைவி புதுசு என்று அர்த்தமாம் அல்லது அவன் கார் புதுசு என்று அர்த்தமாம்.
|
Read more...
|
Monday, 15 November 2010 10:22 |

திருக்குர்ஆனும் மனிதனும்
‘மனிதன் சுதந்திரமுள்ளவன், பொறுப்புள்ளவன்,
நன்மை தீமைகளை பிரித்தறியும் ஆற்றல் உள்ளவன்,
இறைவனுடைய சட்டங்களுக்க கீழ்படியும் இயல்புள்ளவன்.
அவன் செய்த பாவங்களுக்காக பிறர் பிணை நிற்க வேண்டிய அவசியமில்லை.
அவனது குற்றங்களுக்காகவும், பாவங்களக்காகவும் அவனே மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அருளும், அன்பும், இரக்கமும் நிறைந்த இறைவன் அவனுடைய பாவங்களை மன்னிப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.
‘ஒவ்வொரு குழந்தையும் இறைவனுக்கு கீழ்படியும் சட்டத்திற்குட்பட்டு, அதாவது முஸ்லீமாகவே பிறக்கின்றது’ என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவ்வாறு தூய்மையாகப் பிறந்த குழந்தை, பிறகு, சூழ்நிலையின் காரணமாக மாறுபட்டு விடுகின்றது. குழந்தை மனிதனாக வளர்கின்றது. அந்த மனிதன் இறைவனால் அவனுக்கு அருளப்பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றான். நல்லவனாகவோ கெட்டவனாகவோ ஆகின்றான்.
அவன் தீமை செய்தால் வருந்தி பாவமன்னிப்புத் தேடுவதற்காக இறைவன் அவனுக்கு நீண்ட அவகாசம் அளிக்கின்றான். எனவே, ஆன்மீகத்துறையில் முன்னேற்றம் அடைவதும், அடையாததும் மனிதன் கையில் இருக்கிறது.
|
Read more...
|
Tuesday, 13 July 2010 14:58 |

அல்குர்ஆனை அதிகமாக ஓதுவோம்
அல்குர்ஆனை அதிகமாக ஓதவேண்டும். மேலும் அதனை பொருளுணர்ந்து படித்து அதன்படி செயல்பட வேண்டும்.
( يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا )
நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ2838, அபூதாவூத், அஹ்மத்)
( الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ )
அல்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுபவர் தூய்மையான, கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1329)
|
Read more...
|
Thursday, 14 October 2010 12:07 |

அல்லாஹ்வை நினைவு கூறும் வழிமுறைகள்
ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.
நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே!
|
Read more...
|
Monday, 12 April 2010 09:43 |

இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்!
இப்னு ஹனீஃப்
மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில் இருந்து எப்படியாவது விரைவில் விடுபட முயல்பவர்களாகவே, (அதில் தோல்வியடைந்தவர்கள் அல்லது வெற்றி பெற்று நேர்வழியில் வாழ்பவர்கள் ஆகிய இரு சாராரும்) இருப்பது யதார்த்தமான ஒரு மனித இயல்பு ஆகும்.
இதற்கு மாற்றமாக விதி விலக்காக ஒரு சிலர் பாவங்களில் மூழ்கியும் அதை விட்டு விடுபடாமலும், அதையே தொடர்வது இருப்பினும் ஏதாவது ஒரு நேரம் அதை நினைத்து வருந்திடாமல் இருக்கமாட்டார் என்பதை மறுக்க இயலாது. அவர் பாவமன்னிப்பு கேட்பது கேட்காமல் இருப்பது என்ற எந்த நிலையில் இருப்பினும் புத்தி சுவாதீனமுடன் இருப்பின் அவர் இதை தமது வாழ்வில் ஏதேனும் ஒரு கணமாவது நினைத்து வருந்தி பச்சாதாபப்படாமல் இருக்க மாட்டார்.
ஆனால் ஒருவர் தாம் செய்வது பாவம் என்று அறியாமல் அதை தொடரும் போது அதை நன்மையென்று கருதி பலரும் செய்வதைக் காணும் போது அதை ஒரு தவறு என்று கூட கருதாமல் மார்க்க காரியம் எனும் அடிப்படையில் செயல்படும் போது அவர் அந்தச் செயல்களுக்குப் பாவமன்னிப்பு கேட்கும் வாய்ப்பே இல்லாத நிலையில் மரணித்து விடுகிறார் என்பது மிகப் பெரிய இழப்பு என்பதில் ஏதும் சந்தேகமில்லை.
|
Read more...
|
Sunday, 27 December 2009 07:50 |

இஸ்லாமிய இயக்கத்தில் இணைவது கடமையா?
நிஃமத்துல்லாஹ்
ஒவ்வொரு முஸ்லிமும் ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பை சார்ந்திருப்பது கடமை என்ற கூற்று உண்மையா? அப்படியெனில் ஒரு நாட்டில் பல இஸ்லாமிய அமைப்புகள் இருந்து ஒரு நடுநிலைவாதிக்கு நேர்வழியிலுண்டான அமைப்பை தேர்ந்தெடுத்து, அதில் சேர்வது என்பது மிகக் கடினமான செயலாயிற்றே?
இதன் நிலைகளை காண்போம். பல தெளிவான ஹதீஸ்கள் எந்த ஒரு முஸ்லிமும், அவன் வாழும் பகுதியிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தை விட்டும் பிரிந்து வாழக்கூடாது என்பதை அறிவிக்கின்றன. மேலும் சமுதாயத்தை விட்டு பிரிந்து வாழ்வதை வன்மையாக கண்டிக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முஸ்லிமும், முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு அங்கத்தவராகவே இருக்கிறார். அவர் அதனுடைய வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுள் ஒருவராக எப்பொழுதுமே திகழ வேண்டும்.
சில ஹதீஸ்களின் நேரடிமொழி பெயர்ப்பு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பை சார்ந்திருப்பது கடமை என்ற உணர்வை தோற்றுவிக்கிறது. இது தவறு. ஏனெனில் பரவலான கருத்துக்கள் அடங்கிய ஒரு வாக்கை (சொல்லை) ஒரு குறிப்பிட்ட வரையறுக்குள் உட்படுத்துவது கூடாது. சரியானதொரு ஆதாரம் இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது.
நாம் அனைவரும் முஸ்லிம் சமுதாயத்தில், உம்மத்தில் ஓர் அங்கத்தவராக திகழ இஸ்லாம் வேண்டுகிறது. அங்ஙனம் ஒரு அங்கத்தவராக திகழ்வதனால் ஏற்படும் பயன் நாம் அனைவரும் தயாராக முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் எல்லா காரியங்களிலும் எல்லா நிலைகளிலும் உதவியாக இருக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அது அமைதி மற்றும் உடன்படிக்கை நேரங்களானாலும் அல்லது போர் நேரங்களானாலும் அல்லது சுகமான மற்றும் செழுமையான நேரங்களானாலும் அல்லது கடினமான மற்றும் தாங்க முடியாத கஷ்ட நேரங்களானாலும் சரியே!
|
Read more...
|
Tuesday, 03 March 2009 16:05 |
 
மனநிலை பாதிப்பால் வயிற்றுப்போக்கு!
எஸ்.எம். பதூர் முஹ்யித்தீன்
[ ஒரு இன்பத்தை அனுபவித்து கொண்டு, அந்த இன்பம் கிடைக்காவிட்டால் அதையே நினைத்து நினைத்து மூழ்குகிற போது எதிர்மறையான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.]
சில நாட்களுக்கு முன்பு 20 வயதுள்ள ஆண்மகனை அழைத்துக் கொண்டு அவனுடைய அம்மா என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார். நல்ல திடமான தேகம், கல்லூரியில் படிப்பு, விளையாட்டு வீரர்.
பையனுக்கு என்னம்மா? 15 நாளா இவனுக்கு வயிற்றுப் போக்கு இருக்குது. எல்லா வைத்தியமும் செய்தாச்சு. வயிற்றுப் போக்கு நிக்கமாட்டேங்குது டாக்டர்.
வயிற்றுப் போக்கு போகக்கூடாது ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறணும். குளுக்கோஸ் ஏத்தனும். ஒரு சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணுமேம்மா!
"இந்தாங்க டாக்டர், ஒரு பெரிய மருத்துவமனைக்கு போய் அட்மிட் பண்ணி குளுக்கோஸ் ஏத்தி எல்லா டெஸ்ட்டும் செய்தாச்சு, விவரம் எல்லாம் இந்த பைலில் இருக்குது வாங்கிப் பார்த்தேன், அனைத்தும் இருந்தன."
|
Read more...
|
Thursday, 19 April 2012 16:11 |

எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கும் 'கத்னா'
ஆண்கள் கத்னா செய்து கொள்வது எய்ட்ஸ் அபாயத்தை பெருமளவு குறைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டு மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக் கூடிய ஆட்கொல்லி எய்ட்ஸ் பரவுவதிலிருந்து இவ்வுலகத்தைக் காக்க, ஆண்கள் கத்னா செய்து கொள்வதை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம் என்று அந்த நிபுணர்கள் சொன்னதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரஸ் நியூஸ் ஏஜென்ஸி என்ற பத்திரிக்கைகளுக்காக செய்திகளை சேகரிக்கும் நிறுவனம், இந்தக் கூடுதல் விபரத்தை தெரிவிக்கிறது.
ஆண்கள் கத்னா செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸை அதிக அளவில் தடுக்கலாம் என்று அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான டாக்டர் ஃப்ராங்க் பிளம்மர் கண்டுபிடித்துள்ளதாக மத்திய கனடாவின் மனிடோபா பிரதேசத்தின் தலைநகரமான வின்னிபெக்கிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கையிலும் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தியில், இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கென்யா நாட்டு நைரோபி பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை நடத்தி எய்ட்ஸ் ரகசியங்களை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நடத்திய இந்த ஆராய்ச்சியையே அவர்களது மேற்கண்ட முடிவுகளுக்கு அடிப்படையாக கொள்கின்றனர்.
|
Read more...
|
Wednesday, 07 November 2012 05:39 |

டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்!
தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
பப்பாளி இலைகள் இதற்கு தீர்வாக அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.
|
Read more...
|
Saturday, 10 March 2012 21:08 |
 
குடல்வால் (Appendicities) நோய் -அதை நீக்கும் எளிய முறை
சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது.
அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர், சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.
அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.
|
Read more...
|
Saturday, 29 October 2011 06:41 |


குளிர்ச்சியையும் நறுமணத்தையும் தரும் வெட்டிவேர்!
பூக்களின் வாசனை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வகை புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.
வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது. இதன் மருத்துவ பயன்கள் ஏராளம்.
|
Read more...
|
|
|