Friday, 28 June 2013 19:53 |

Q. நானும் எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? -ஒரு வாசகர்.
A. நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் உள்ளது. நிர்வாணம் அவசியம் என்பதற்காக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை. அவசியமில்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு வகை. அவசியமான நிர்வாணத்துக்கு உள்ள அனுமதியை அவசியமில்லாத போது பயன்படுத்தக் கூடாது.
மலஜலம் கழிக்கும் போது நிர்வாணம் அனுமதிக்கப்படுவதால் எல்லா நேரத்திலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.
கணவன் மனைவி மட்டுமே இருந்தாலும் எப்போது ஒருவருக்கொருவர் தேவையோ அந்த நேரங்களில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. அவ்வாறு இல்லாமல் எல்லா நேரங்களிலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.
|
Read more...
|
Monday, 07 October 2013 06:22 |

கருக்கலைப்பு செய்வது இஸ்லாத்தில் கூடுமா?
அபார்ஷன் எனப்படும் கருக்கலைப்பு மேற்கத்திய சமூகத்தின் பெரும்பிரச்சனையாகிவிட்டது. மேற்கத்திய சமூகம் வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிக்கும் மதச்சார்பின்மை (secularism) என்ற அகீதாவின் அடிப்படையில் நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதனால் மேற்கத்திய சமூகம் தனிநபர் சுதந்திரத்தை புனிதப்படுத்துவதோடு திருமண வரம்பிற்கு அப்பாற்பட்ட கள்ள உறவுகளும்,விபச்சாரமும் பெருகி கருக்கலைப்பும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.
இத்தகைய மேற்கத்திய சமூகங்களில் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 45% குழந்தைகள் சட்டத்திற்கு புறம்பான குழந்தைகள் என்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சில நாடுகளில் இது 70% வரை உள்ளது.
விபச்சாரத்தின் மூலம் பிறக்கின்ற இத்தகைய குழந்தைகளை கவனிக்கக்கூடிய பொறுப்பு தாயின் மீது விழுவதால் கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதியை மேற்கத்திய நாடுகள் வழங்குகின்றன.
அமெரிக்காவின் தலைமையிலான குஃப்ர் தேசங்கள் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியமான குடும்ப அமைப்பை சிதைப்பதற்காக முஸ்லிம் நாடுகளிலும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கவேண்டுமென்று துடிக்கிறார்கள்.
இதன்மூலம் முஸ்லிம்களின் குடும்ப கட்டமைப்பை தகர்த்தெறிந்து, முஸ்லிம்களை இஸ்லாத்தைவிட்டும் வெகுதூரமாக்க வேண்டுமென்று எத்தனிக்கிறார்கள்.
முஸ்லிம் உலகிலுள்ள சமூகங்களைப் பொறுத்தவரை விபச்சாரம்,கள்ளத்தொடர்பு போன்றவை மேற்கத்திய நாடுகளைப்போன்று பரவலாக இல்லாத காரணத்தால் கருக்கலைப்புகள் மருத்துவ அடிப்படையில் தாயினுடைய உயிரைக் காப்பதற்காகவே செய்யப்படுகின்றன.
|
Read more...
|
Sunday, 15 September 2013 06:01 |

ஈமானின் உறுதி எங்கெல்லாம் ஒளிந்திருக்கிறது...!!!
ஐயம் : நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வேன். இதை செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும். எனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது. திருமணமானவுடன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அரபு நாடுகளுக்கு வரலாமா?
தெளிவு : "மனிதன் நன்மையைக் கோருவது போலவே தீமையையும் கோருகிறேன். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்". என அல்லாஹ்(ஜல்) பரிசுத்த நெறி நூலின் 17:11 வசனத்தில் தெரிவிக்கிறான். ஹராமான செயல்களில் ஈடுபடும்படி ஆகிவிடும் என்பதற்காக, தங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் எனத் தெரிகிறது.
"இதைச் செய்ய்வில்லையென்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்" என தாங்கள் கூறுவதிலிருந்து தங்களின் (Will – Power) மன உறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிகிறது.
|
Read more...
|
Thursday, 26 May 2011 07:11 |
சுய இன்பமும் ஸலஃபி நிலைப்பாடும்!
"சுய இன்பம்" இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?
இந்த பிரசுரத்தின் நோக்கம், மார்க்கத்தில் இந்த விஷயத்தின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதாகும். ஏனெனில், இந்த விஷயம் பற்றி ஸலஃபி விளக்கங்கள் இல்லாமல் தவறாக தீர்ப்பு சொல்லப் படுவதனால், மருத்துவ ஆதாரங்களோடு பிரசுரிக்கப் படுகிறதே தவிர ஆர்வமூட்டுவதற்கு அல்ல.
இந்த விஷயத்தை தடை என்று சொல்ல பலரும் கையாளும் வழி முறைதான் மருத்துவம். எனவே, மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் சொன்ன செய்திகள், செய்தி தாள்களில் வந்தவைகளை, கீழே சேர்க்கப்பட்டுள்ளது.
அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும். எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல!
விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண், பெண் உடல் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு / உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.
|
Read more...
|
Thursday, 15 April 2010 09:30 |

ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரஸூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''கேளுங்கள்'' என்றார்கள்.
1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
o நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.
2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
o தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
o ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
4 நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
o ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
5 நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன்!
o நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்.
|
Read more...
|
Sunday, 03 November 2013 08:26 |

திருமணத்திற்கு முன்பிலிருந்து இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கும் மனைவியை என்ன செய்ய...?
Q. மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. என்ன செய்ய?
A. திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
திருமணம் செய்யாத நிலையில் இது போல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும். இஸ்லாமிய ஆட்சியில் நீங்கள் குறிப்பிடும் பெண் இரு வகையான தண்டனைக்கும் உரியவராகிறார்.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத நிலையில் அவளது கணவன் தன்னளவில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 24:3)
|
Read more...
|
Thursday, 12 November 2009 07:34 |

பிறர் காலில் விழலாமா? மரியாதை நிமித்தமாக பிறருக்காக எழுந்து நிற்கலாமா?
ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி:
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். "இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்'' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து "நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன்.
|
Read more...
|
Sunday, 28 August 2016 11:08 |
அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா?
இது குறித்து இருவிதமான கருத்துக்கள் கொண்ட ஹதீஸ்கள் உள்ளதால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
1338 حَدَّثَنَا عَيَّاشٌ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
“ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1338)
அடக்கம் செய்து விட்டு திரும்பும் மக்களின் செருப்போசையை இறந்தவர் கேட்பார் என்பதில் இருந்து மண்ணறைகளுக்கு செருப்பணிந்து செல்லலாம் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு மாற்றமான கருத்தைத் தருகிறது.
|
Read more...
|
Wednesday, 31 March 2021 07:26 |

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல!
Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
[ மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் நிரப்புவதும், விரல்களை வருடிச் சென்றாலும் கைகளுக்குள் கிட்டாமல் விரலிடுக்கில் நழுவிச் செல்லும் மெல்லிய காற்றாய் விடுவதும் நம் கைகளில் தான் இருக்கிறது.
உண்மையில் சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு தொற்று. மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால் தான் மற்றவருக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியும்.
புரிந்து கொள்ளுங்கள். மகிழ்ச்சி என்பது பலூன் இல்லை. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் உடைத்து விட்டுப் போகிறதற்கு. மகிழ்ச்சி என்பது நம்மோடு இயைந்து, நம்மை இயக்கிக் கொண்டு எப்போதும் நம் கூடவே இருக்க வேண்டிய நம் முச்சுக் காற்று.
நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்... ஏதாவது தர்ம சங்கடமான விஷயத்தைக் கேட்டாலோ, தர்ம சங்கடமாய் உணர்ந்தாலோ, நம்மையுமறியாமல், ஒரு பெரு மூச்சு விடுவோம். அல்லது நாம் முனைந்து அந்த பெரு மூச்சு விடும்போது இலகுவாக உணருவோம்.
இயற்கை நமக்கு மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் தான் வைத்திருக்கிறது.]
|
Read more...
|
Thursday, 24 March 2011 08:17 |

‘இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’
மவ்லவி, எம்.எம். முஹம்மது இப்ராஹீம், சென்னை
அல்லாஹ் மனிதகுலத்திற்கு வழங்கிய மிகச்சிறந்த அருட்கொடைகளில் ஒன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது தூதராக அனுப்பியது. இதை தனது திருமறையிலேயே அல்லாஹ் குறிப்பிட்டுக்காட்டுகிறான்.
‘நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.’ (அல்குர்ஆன்: 3:164)
‘எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.’ (அல்குர்ஆன்: 4:80)
|
Read more...
|
Wednesday, 16 February 2011 08:13 |

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ''ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.'' (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு).
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
o ''பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ, அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
|
Read more...
|
Sunday, 20 February 2011 08:56 |

ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள்.
ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள்.
இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும்.
|
Read more...
|
Friday, 08 November 2013 07:29 |

நன்மை பயக்கும் நபிமொழி
o "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள்.
"ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள்.
"ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு, "அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி 2693)
|
Read more...
|
Sunday, 27 July 2014 00:04 |

ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்
இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத் தக்க ஒன்று.
ஈத்துவக்கும் இன்பத்தை கடமையாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள்.
பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும்; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக் குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி.
ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம்.
|
Read more...
|
Monday, 23 March 2015 06:22 |

பெண்களுக்கு ஸகாத் கடமையா?
இஸ்லாத்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே பரவலாக நிலவுகிறது. இஸ்லாத்தில் ஈமான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்களுக்கு ஐந்து கடமைகளும், பெண்களுக்கு நான்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை!
திருக்குர்ஆனில், 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன், அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை. ”ஈமான் கொண்டவர்களே” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான்:
[33:33] (நபியின் மனைவிகளே!) ..... தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.
ஆகவே குடும்பத்தின் பொருளாதார பொறுப்பனைத்தும் ஆணின் மேல் உள்ளதால் பெண்கள், தம்முடைய ஸகாத்திற்கும் ஆணே பொறுப்பு என்று தவறாக எண்ணி தட்டிக் கழிக்க இயலாது. எப்படி பெண்களின் ஈமான், தொழுகை, நோன்பு ஆகியவற்றிற்கு அப்பெண்களேதான் பொறுப்போ, அதேபோல பெண்களின் ஸகாத்திற்கும், ஹஜ்ஜிற்கும் பெண்கள்தான் பொறுப்பு! ஆண்கள் அல்ல!
|
Read more...
|
Saturday, 24 June 2017 18:04 |

ஸகாத் பெட்டி
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
[ ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா?
ஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும் "ஸகாத் பெட்டி" ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக்கூடாது.
தொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை ஆலிம்கள் தாம் முன்னின்று செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும் "நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த "ஸகாத் பெட்டியில் போடுங்கள்" என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.]
|
Read more...
|
Sunday, 20 October 2019 08:21 |

ஒருவருக்கு கொடுத்த நன்கொடையையோ, சன்மானத்தையோ திரும்ப கேட்காதீர்கள்!
"ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெறுவது ஆகுமானதாகும்."
மற்றோர் அறிவிப்பின்படி, "எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.
(அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு உமர் َரளியல்லாஹு அன்ஹு, நூல் : ஸூனன்)
|
Read more...
|
Thursday, 21 February 2019 09:17 |

அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்தவர் இஸ்லாமை ஏற்ற அதிசயம்!
டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் "Masters in Divinity" பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.
பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.
இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.
அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்
|
Read more...
|
Sunday, 10 December 2017 09:18 |

பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற இடம்பெற்ற ஜைனப் கொபோல்டு
[ பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஜைனபு கொபோல்டுக்கு ஓர் ஒப்பற்ற இடமுண்டு. சவுதி அரசாங்கத்தின் விருந்தினராக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிய முதல் முஸ்லிம் ஆங்கிலப் பெண்மணி இவர். ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு 1933 ]
"நான் எப்போது, ஏன் இஸ்லாத்திற்கு வந்தேன் என்று அடிக்கடி பலர் என்னிடம் கேட்கிறார்கள். இஸ்லாம் என்ற உண்மை மார்க்கம் எப்போது என்னில் விடியலானது என்பது பற்றிக் குறிப்பாக எனக்குத் தெரியாது என்று மட்டும் என்னால் கூற முடியும்.
ஆனால், நான் எப்போதுமே முஸ்லிமாகவே இருந்து வந்திருக்கின்றேன் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தனது வாழ்வைப் பற்றி அறிமுகம் செய்கிறார் ஆங்கிலேயச் சீமாட்டி லேடி எவலின் கொபோல்டு என்ற ஜைனபு.
ஏனென்றால், தன் குழந்தைப் பருவம் முதல் இஸ்லாமியச் சூழலில் (அல்ஜீரியா நாட்டில்) வளர்ந்து, முஸ்லிம் தோழிகளுடன் சேர்ந்து இறைவணக்கமாகிய தொழுகையைப் பழகி, அரபு மொழியைப் பேசக் கற்று, உள்ளத்தளவில் முஸ்லிம் சிறுமியாக வளர்ந்து வந்ததாகப் பெருமைபடக் கூறுகிறார் ஜைனப் கொபோல்டு (Zainab Cobbold)
இஸ்லாமியச் சூழலில் வளர்ந்ததால், முஸ்லிம்களின் நடையுடை, பாவனைகள் தன்னிடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாகக் கூறும் ஜைனபு, பிற்காலத்தில் இத்தாலி நாட்டிற்குக் குடிபெயர்ந்து சென்ற பின்னரும் பெரியவளாகி, முஸ்லிம் பெண்கள் அணியும் நீண்ட கருப்பு உடை (புர்கா) அணியும் பழக்கமுடையவரானார்.
|
Read more...
|
Monday, 29 March 2021 07:06 |

ஜீவராசிகளின் விஷம் - மருந்து
ரஹ்மத் ராஜகுமாரன்
( குகையில் நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தீண்டியபோது.....)
பாம்பு, தேள் என்ற உடனே அவற்றின் விஷத்தன்மை நம் நினைவுக்கு வரும். இந்த உயிரினங்களுக்கு இரையை வேட்டையாடுவது, தற்காப்புக்கு என்று பொதுவாக 2 செயல்பாடுகளுக்கு விஷம் பயன்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் நஞ்சு பலவித மாறுதல்களுக்கு உள்ளாகி, ஒவ்வோர் உயிரினத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் தகவமைக்கப்பட்டு உள்ளது.
நஞ்சு என்பது ஒரே ஒரு வேதிப்பொருள் அல்ல; உயிரியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல பொருட்கள் அடங்கியது. குறிப்பாக புரதங்களின் கலவை. அதில் இருக்கும் ஒவ்வொரு சேர்மத்துக்கும் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டில் பங்கு உண்டு.
ஒட்டுமொத்தமாக நஞ்சு உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றாலும், அதில் உள்ள சில பொருட்களுக்கு அபாரமான மருத்துவ பண்புகளும் உள்ளன.
பிற உயிர்களிடத்தில் குறிப்பிட்ட ஓர் நஞ்சு ஏற்படுத்தும் வினையை ஆராய முயன்றபோது, நஞ்சில் இருக்கும் பொருட்களின் தனிப்பட்ட செயல்முறை, அவற்றின் மருத்துவப் பயன் ஆகியவை கண்டறியப்பட்டன.
|
Read more...
|
|
|