Friday, 13 July 2018 08:12 |

வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்!
உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம்.
உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.
இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:
இறையச்சத்தின் அவசியம்:
“அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள், இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்”. (அல்குர்ஆன் 21: 49)
|
Read more...
|
Wednesday, 18 June 2014 12:32 |

மனதை ஒருமுகப்படுத்த நீட்டிய சுட்டு விரலைப் பாருங்கள்
”அஸ்பயர்’ (Aspire) என்னும் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் கடந்த பிப்ரவரி 20ம் தேதி (2010) சென்னை அசோக் நகரில் கிளை (Branch) ஒன்றைத் துவக்கியது. அடையார் கிளை “அஸ்பயர்’ உரிமையை சில மாதங்ளுக்கு முன் நான் எடுத்திருக்கிறேன். அந்த முறையில் புது அலுவலகத் திறப்பு நிகழ்ச்சிக்கு நான் அழைக்கப் பட்டிருந்தேன். நிகழ்ச்சிக்குப் பல தரப்பு மாணவ மாணவியர்களும் அவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் "அஸ்பயர்" இயக்குனர்களில் ஒருவரும், சிறந்த கல்வியாளரும் (Academic) மனோதத்துவ நிபுணருமான டாக்டர் பால்ராஜ் அவர்கள் "தேர்வில் 100 சதம் மதிப்பெண்கள் பெறுவது எப்படி?” என்ற தலைப்பில் உரையாற்றினார். அது முழுக்க முழுக்க நடக்க இருக்கும் தேர்வுகளைச் சந்திக்க இருக்கும் மாணவ மாணவியர்களின் நன்மையைக் கருதி அவர்களை முன்னிருத்தியே பேசப்பட்டது. சொற்பொழி வின் முடிவில் அவர் கூறிய சில கருத்துகளும், செய்து காட்டிய செயல் முறையும், பயிற்சி வகுப்பும் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. கூட்டத்திலிருந்த நானும் அதில் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். டாக்டர் பால்ராஜ் கூறினார்.
".....நாம் விழித்திருக்கும் நிலையிலும், தூக்கத்திலிருக்கும் போதும் நரம்பு மண்டல மான மூளையில் மின் அலைகள் (Electronic Impulses) ஏற்படுகின்றன. விழித்திருந்து செயல் படும் போது அந்த மின்னலைகள் கூடுதலாக வும், உறங்கும் போது குறைவாகவும் இருக்கின் றன. நரம்பு மண்டல மின்னலைகள் நின்று விட்டால் மனிதன் இறந்து விடுகிறான். ஆனால் விழித்துச் செயல்படும் நிலைக்கும் தூக்கத்துக்கும் இடையே ஒரு நடுநிலை இருக்கிறது. அதனை "ஆல்ஃபா நிலை" (Alpha Status) என்று சொல்லுவார்கள்.
அது விழித்திருக்கும் நிலையாக இருந்தாலும் அந்நிலையில் மின்னலைகள் ஒரே சீராக இருக்கும்.
அந்த நிலையில் மனிதன் உணர்ச்சி வசப்படமாட்டான்.
கோபம் கொள்ள மாட்டான். அச்சமும் துக்கமும் அவனை அணுகாது.
பொறுமையே அவனை ஆளும்.
சிந்தனைத் திறனையும், மன ஓர்மையையும் கட்டுப்பாட்டையும் ஒருவர் அந்த நிலையில் தான் பெற முடியும்.
|
Read more...
|
Friday, 23 March 2012 07:57 |


"நேரமில்லை" – ஓர் இஸ்லாமியப் பார்வை!
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூஷன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது.
ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!
|
Read more...
|
Tuesday, 26 July 2011 08:26 |

நோயாளியின் தொழுகை
நோய் என்பது ஆரோக்கியத்தின் எதிர் மறையாகும். உடம்பிலும், மார்க்கத்திலும் ஆரோக்கியம் உள்ளது போல், இவ்விரண்டிலும் அதற்கு எதிரான நோயும் உண்டு. உள்ளதில் நோய் எனப்படுவது, ஒரு மனிதனின் மார்க்க விஷயங்களில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் குறிக்கும். எனவே! நோய் என்பது அடிப்படையில் குறைபாடாகும்.
நோயான உடம்பு என்றால் ஆரோக்கியமற்ற, வலிமை குறைந்த உடம்பு என்று பொருளாகும். மேலும் நோயான உள்ளம் என்பது மார்க்க விஷயங்களில் அவரிடம் உள்ள குறைகளையும் சத்தியத்தை விட்டும் தூரமானதையும் குறிக்கும். நோயான உடம்பு என்பது உடல் உருப்புக்களில் ஏற்படும் சோர்வைக் குறிக்கும்.
ஒரு நோயாளியிடம் இருக்க வேண்டிய பொறுமையும் அதற்கான கூலியும்: ஒரு நோயாளி தனக்கு ஏற்பட்டுள்ள நோயை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பொறுமையாளிகளுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ள நன்மைகளை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் – அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்." (அல்குர்ஆன் 39: 10)
|
Read more...
|
Friday, 29 July 2011 08:29 |

கஸ்ரு (பயணத் தொழுகை), ஜம்உத் (இணைத்துத் தொழுதல்) பற்றி...
[ சுன்னாவின் ஒளியில் ]
ஜம்உ (இணைத்துத் தொழுதல்)
இரு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதை ஜம்உ என்று கூறுகிறோம். பயணத்தில் இருப்போருக்கு லுஹ்ரு, அஸ்ரு, மக்ரிப், இஷா ஆகிய நான்கு நேரத் தொழுகைகளை முறையே, லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகையின் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும் மக்ரிபையும் இஷாவையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகையின் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும் தொழுவதற்குப் பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கஸ்ரு (சுருக்கித் தொழுதல்)
அதுபோல் நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதைக் கஸ்ரு என்று கூறுகிறோம். நான்கு ரக்அத் தொழுகைகளான லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுவதற்குப் பயணிகள் சலுகை வழங்கப்பட்டுள்ளனர்.
ஜம்உ + கஸ்ரு (இணைத்து + சுருக்கித் தொழுதல்)
பயணத்தில் இருப்போருக்கான ஜம்உ + கஸ்ருச் சலுகையின் கீழ் ஃபஜ்ருத் தொழுகை வராது. பயணிகளுக்கான லுஹ்ருடைய தொழுகை நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் மறைவதற்கு முன்வரை லுஹ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் அஸ்ருக் கஸ்ரான 2 ரக்அத்களையும் இணைத்து வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம். மக்ரிபுடைய 3 ரக்அத்களுக்குக் கஸ்ரு இல்லை. எனவே, மக்ரிபுடைய 3 ரக்அத்களை இஷாவின் கஸ்ரான இரண்டு ரக்அத்களோடு இணைத்து இரவின் வசதிப்பட்ட ஏதேனும் ஒரு நேரத்தில் தொழுது கொள்ளலாம்.
|
Read more...
|
Sunday, 14 November 2010 12:47 |

தயம்மும் செய்வது எப்படி?
மவ்லவீ, ஜமீலுத்தீன் மிஸ்பாஹி, கோட்டக்குப்பம்
''முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹ் செய்து) கொள்ளுங்கள்;.
உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;.
தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;.
அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.''(அல்குர்ஆன்: 5:6.)
''.... நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி ''தயம்மும்" செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:43)
மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கும் கோட்பாடுகள் மிக மிக இலகுவானவை. எல்லோராலும், எக்காலத்திலும் போற்றத்தக்கவை, செயலாற்றத்தக்கவை. அதில் ‘தயம்மும்’ ஒன்றாகும்.
|
Read more...
|
Sunday, 22 May 2011 08:34 |

தொழுகையும் உடல் ஆரோக்கியமும் (1)
ஸய்யத் மன்ஸூர் அஹ்மத்
[ ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய தொடர் கட்டுரை இது! ''கல்வி கற்பது ஒவ்வொரு ஆணின் மீதும், பெண்ணின் மீதும் கட்டாயக்கடமை'' யாக இருக்கும்போது இக்கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்வது கட்டாயம் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை என்றே சொல்லலாம். - adm.]
இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் தொழுகையும் ஒன்று. தினமும் ஐந்துவேளை தொழ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இக்கடமையை பேணி, அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவின் கட்டளைக்கு கீழ்பணிந்து தினம் ஐவேளை தொழுபவருக்கு, மறுமையில் ஏராளமான நற்பாக்கியங்கள் உண்டு. இம்மையிலும் ஏராளமான நற்பாக்கியங்கள் கிடைக்கும்.
இவ்விதம் கிடைக்கும் நற்பாக்கியங்கள் பற்றி திருக்குர்ஆனிலும், திருநபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளன. எனவே, தொழுகை இம்மை மறுமை நற்பேறுகளை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது.
மேலும், தொழுகையை பேணுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை ‘போனஸாகவும்’ வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான், தொழுகை, தொழுகையை பேணுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாக இருப்பது!
மருத்துவரீதியாக தொழுகை மனிதர்களுக்கு எவ்விதம் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்பதைத்தான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்!
|
Read more...
|
Wednesday, 03 August 2016 06:42 |

வித்ர் தொழுகையின் சட்டங்கள்
வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் 1, 3, 5, 7, 9, 11
வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம்.
ஒரு ரக்அத்து:
வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர்.
‘இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ (புகாரி: 472)
‘இப்னு அபீ முலைக்கா ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, தம்மிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றார். (முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.’ (புகாரி: 3764)
|
Read more...
|
Monday, 29 October 2012 21:12 |

தொழுகையின் ஃபர்ளுகள் மற்றும் வாஜிபுகள்
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்):
1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது
2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர் கூறுவது
3) ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
4) ருகூவு செய்தல்
5) ருகூவுக்குப் பின் நேராக நிற்பது
6) ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு ஸஜ்தா செய்தல்
|
Read more...
|
Wednesday, 24 February 2021 07:43 |

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்
ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள் ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும்.
“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும்.
அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம்.
இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்.
இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (9:36)
|
Read more...
|
Monday, 19 November 2012 21:37 |

ஆலிம்களுக்கு அன்பு வேண்டுகோள்!
கண்ணியமிக்க ஆலிம்களே, இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்தை உறுதிபடுத்த, மக்களுக்கு மத்தியில் உண்மையை சொல்லி, ஏகத்துவத்தின் பக்கம் அழைக்க முற்பட்ட தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறைஷி காஃபிர்களுக்கு மத்தியில் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், ஆளாகி, தனக்கு வல்ல அல்லாஹ் அளித்த திருமறைப்படி மக்களை அழைத்து, இதுதான் இஸ்லாம் – இப்படித்தான் அல்லாஹ் நம்மை நடக்கச் சொல்லி உள்ளான் என்றும், சிறு விஷயம் முதல் பெரிய விஷயம் வரையிலும் எடுத்துரைத்தார்கள்.
அன்று வாழ்ந்த மக்களில் ஒரு கூட்டம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கல்லாதவர், அவர் சொல்வதை நாம் கேட்பதா? நமது அந்தஸ்த்து என்ன? கெளரவம் என்ன? என்று வரட்டுக் கெளரவம் பாராமல் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்-செயல்-அங்கீகாரப்படி ஒரு விஷயத்தை கூட விடாமல் பின்பற்றி நடந்தார்கள். அவர்களே நபித்தோழர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்கள் எதை எப்படி சொன்னார்களோ, அதை அப்படியே செய்து, எதை தடுத்தார்களோ அவற்றைத் தடுத்து வாழ்ந்தார்கள், உத்தம சஹாபாக்கள், நான்கு கலீபாக்கள், தாபியீன்கள், தபஅதாபியீன்கள், ஏன் அந்த நான்கு இமாம்கள் கூட, குர்ஆன் ஹதீஸ்படி தான் வாழ்ந்து மக்களுக்கு உண்மையான மார்க்கத்தைச் சொல்ல, தங்களின் உயிரையே பணயமாக வைத்துப் போராடினார்கள், போதித்தார்கள்.
|
Read more...
|
Wednesday, 05 December 2012 10:40 |

தவறைச் சுட்டிக்காண்பிக்காமல் இருக்க முடியாது..
முகநூலிலிலும், மற்ற இடங்களிலும் சக நட்பிடத்தில் தவறுகள் காணப்பட்டால்....
ஒரு சிலரைத் தவிர... பெரும்பாலோர் சுட்டிக் காட்டுவதில்லை...
காரணம்..
நமக்கேன் வம்பு...? என்றுதான் பலர் ஒதுங்குவதற்கு அடிப்படைக் காரணம்..
உண்மையில் ஒரு முஸ்லிம் அப்படி இருக்கலாமா..?
தவறைக் கண்டும், அதைச் சுட்டிக் காட்டாமல் ஒதுங்குவது ஒரு உண்மை முஸ்லிமுக்கு அழகாக இல்லை.
தவறைச் சுட்டிக் காட்டினால்..நட்பு தவறாக நினைக்குமே...? என்று நினைக்கிறீர்களா...?
அப்படிப்பட்ட நட்பு நமக்குத் தேவையில்லை
என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு...
|
Read more...
|
Friday, 30 March 2012 21:49 |

வழிகேடர்களை அடையாளம் காட்டுவதின் அவசியம்!
சிலர் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம், (வழிகேடர்களை) வெளிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள்.
அதற்கவர்கள்," நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள்?" என பதில் அளித்தார்.
ஒருவர், தொழுது கொண்டு, நோன்பை நோர்த்து, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று, அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்கப்பட்டது.
|
Read more...
|
Saturday, 17 March 2012 15:12 |

தாவத் நெருக்கடிகள் !
[ ஐம்பது ஆண்டுகள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் மத பிரச்சார பீடங்களை அலங்கரித்தவர்கள் ஒரே ஒருவரையும் இஸ்லாம் மதத்துக்குள் நுழைக்கவில்லை. களப்பணி காட்டும் உண்மை புள்ளிவிவரம் இது.]
இந்துக்களை முஸ்லிமாக மாற்றுவது, தாவத் பணி இலக்கு.
அரசாங்கம் இந்துக்களின் பெரும் ஆதரவில் நிலைநிறுத்தப்படுகிறது.
மதமாற்றம் சொல்லாட்சி மிகக் குறுகலானது. சிக்கலை வரவழைக்கும். காவல்துறை, நீதிமன்றம், பாயும். முகமூடி தேவைப்படுகிறது. ‘‘அழைப்புப் பணி’’ சொல் பயன்தருகிறது. பாதுகாப்பு கிடைக்கும்.
இந்து சமுதாயத்தில் ஒருவரும் மதம் மாற தயாராயில்லை.
குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் அரசின் பல சலுகைகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டுள்ளனர். பண வசதி, வேலை வாய்ப்பு, கல்வி, விடுதி சலுகை, கடன் தள்ளுபடி, சுகத்தை தியாகம் செய்ய யாரும் விரும்புவதில்லை.
எண்பது ஆண்டுகள் முன்னர், ‘‘மேடை முதலாளிகள்’’ நெல்லை சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் மத மாற்றம் செய்தனர். தொடர்ந்து வந்த மாநில, மத்திய அரசுகள் தாழ்த்தப்பட்ட குடிகளை கல்வி, பொருளாதார நிலைகளில் உயரே தூக்கி நிறுத்தின. மதமாற்றம் அவசியப்படவில்லை.
|
Read more...
|
Thursday, 03 May 2012 17:34 |
 
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும்
[ மனித வாழ்வு இவ்வுலகில் அர்த்தமற்று முடிந்து விடுவதில்லை. மண்ணோடு மண்ணாகி அழிவது மனிதன் என்ற சிருஷ்டியின் வாழ்வுக்கான பொருளன்று. நிரந்தரமாக வாழப் பிறந்தவன். அவ்வாழ்வின் முதற் கட்டமாக இந்த உலக வாழ்வு பரிசோதனையாக அமைந்துள்ளது. இதுவே மறுமை நாள் நம்பிக்கை.
இவ்விரு அடிப்படை நம்பிக்கைகளை ஒட்டியே ஏனைய நம்பிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நம்பிக்கைகள் உண்மையில் இப்பிரபஞ்சம், மனித வாழ்வுக்கான விளக்கம். பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் அறிவுபூர்வமான முடிவுகள். இப் பின்னணியில் இந்த நம்பிக்கைகள் அறிவுபூர்வமாகப் புரியப்படவேண்டும். சிந்தனையின் விளைவாக இந்த அறிவு பெறப்பட வேண்டும் என அல்குர்ஆன் எதிர்பார்க்கிறது.
பிரபஞ்சம் பற்றிய ஆய்வு, சிந்தனை- அறிவு- ஈமான். இவ்வாறு ஒன்றன் விளைவாக ஒன்றை அல்குர்ஆன் காண்கிறது. கண்ணை மூடிக்கொண்டு ஈமான் கொள்ளல் என்பது அல்குர்ஆனைப் பொறுத்தவரையில்கிடையாது.
எனவே சிந்தனை விளைவாக அறிவு விளைவாக ஈமான் என்ற இந்த அடிப்படை பேணப்படல் ஆன்மீகப் பயிற்றுவித்தலின் இரண்டாவது முக்கிய அடிப்படையாகும். அல்குர்ஆன் இக்கருத்தைக் கீழ்வருமாறு தருகிறது.
'அறிவு பெற்றோர் அது உமது இரட்சகனிடமிருந்து வந்தது என அறிந்து கொள்கிறார்கள். விளைவாக அதனை நம்பிக்கை கொள்கிறார்கள். விளைவாக அவர்களது உள்ளங்கள் பணிந்து விடுகின்றன.. (ஸுரா ஹஜ் - 54)]
|
Read more...
|
Monday, 31 December 2012 06:39 |

உண்மையிலேயே உலமாக்களுக்கு அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால்! (1)
[ நீங்கள் அல்குர்ஆனையும் பின்பற்றவில்லை; ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்றவில்லை; நேர்வழி நடந்த கலீஃபாக்களையும் பின்பற்றவில்லை; நபி தோழர்களையும் பின்பற்றவில்லை; அந்த நான்கு இமாம்களையும் பின்பற்றில்லை; யூத, கிறிஸ்தவ ஊர் பெயர் தெரியாத அநாமதேய பேர்வழிகளின் சுய நலத்துடன் கூடிய கற்பனைக் காவியங்களையே பெரிதும் மதித்துப் போற்றி, அவற்றையே வேத வாக்காகக் கொண்டு, நீங்களும் வழி கெட்டு, பெருங்கொண்ட மக்களையும் வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறீர்கள்.
பிழைப்பை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வழிகேட்டில் செல்லும் பெருங்கொண்ட மக்களைத் திருப்திப்படுத்தி ஆதாயம் அடைய, ஷைத்தானின் தூண்டுதலின் அடிப்படையிலுள்ள அவர்களின் மனோஇச்சைக்கு ஏற்றவாறுதான் நீங்கள் 'பிக்ஹு' என்ற பெயரால் மார்க்க சட்டம் சொல்லுகிறீர்கள். ஷைத்தானின் நேரடி ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இறைவனது நேரடி தெளிவான கருத்துக்களை முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்களின் சுய கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், நீங்கள் எந்த அளவு வழிகேட்டில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராவிட்டாலும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.
சுயநலத்துடன் கற்பனை செய்த பொய்யான இட்டுக்கட்டிய ஹதீஸ்களைக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைகளைப் புறக்கணிக்கிறீர்கள்.
அல்லாஹ்வுடைய சொல்லுக்கும், அவனது தூதருடைய சொல்லுக்கும் மாற்றுக் கருத்துக் கொள்வது பகிரங்கமான வழி கேடு என்றும், அது நிரந்தர நரகில் சேர்க்கும் என்று கூறும் அல்குர்ஆன் 33:36, 66, 67, 68 எச்சரிக்கையின் அடிப்படையிலேயும் கூறுகிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து சிந்தித்து முடிவெடுக்க முன் வாருங்கள்.
மவ்லவிகளாகிய நீங்கள், மார்க்கம் அறியாத முத்தவல்லிகள், தலைவர்கள் முன்னால் கைகட்டி வாய் பொத்தி, அவர்கள் காலால் இடும் கட்டளைகளை நீங்கள் தலையால் நிறைவேற்றிவரும் நிலைமாறி, அந்த முத்தவல்லிகளிலிருந்து, தலைவர்களிலிருந்து, செல்வந்தர்களிலிருந்து அனைவரும், மார்க்க அறிஞர்கள் முன் கைகட்டி, வாய்பொத்தி, அந்த அறிஞர்கள் காலால் இடும் கட்டளைகளை அவர்கள் தலையால் நிறை வேற்றிடும் அற்புதமான நிலை உருவாகிவிடும். இன்றைய மவ்லவிகளாகிய உங்களின் இவ்வுலக வாழ்க்கை நிலை பாழ்பட்டதாக ஆகிவிட்டாலும், உங்களின் மறுஉலக வாழ்க்கையாவது சீர்படுவதுடன் எதிர்கால மார்க்க அறிஞர்களின் எதிர்கால நிலையாவது உயரும். மவ்லவிகளாகிய நீங்கள் தயாராவீர்களா?]
|
Read more...
|
Sunday, 20 May 2012 22:08 |

தமிழை வெறுக்க வேண்டாம்!
[ மத அடிப்படை அதி முக்கியம். தனது தாய் மொழி மீதான ஆளுமையும் அவசியம். ரேஷன்கார்டு வேணும். பாஸ்போட்வேணும். அடையாள அட்டை வேணும். வாழும் உரிமை வேண்டும். தமிழ¢ மட்டும் வேண்டாம். மன்னிக்காது தமிழ்ச் சமூகம். தனிமைப்படுத்தப்படுவோம். கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிக்கு தான் என்னவாக விருக்கிறோம். என்ன ஆகப்போகிறோம். தெரியாது. இந்த தன்மைக்கு சமூகம் தள்ளப்பட முஸ்லிம்கள் காரணமாகக் கூடாது.
தமிழை ஏற்கமாட்டோம். அலுச்சாட்டியம் செய்வோர் குர்ஆனிலாவது ஆளுமை பெற்றிருக்கின்றனரா? இல்லை. ஒருசில ஆயத்துகள் கூட நாவில் வர மறுக்கிறது. யாசின் ஓதத் தெரியாது. சின்ன துஆ கூட தெரிவதில்லை. தமிழையும் வெறுத்து குர்ஆனையும் அறை முன் பார்வைக்கு மட்டும் வைத்து வெகு தூரம் பயணம் சென்றிருக்கின்றோம்.
முஸ்லிம்! அவருக்கு தமிழ் தெரியாது. "நிம்மில்கி இன்னா சொன்னாங்கோ". நம்மிள் செய்தாங்கோ" இவ்வாறு தமிழ் பேசுவது போலவும், கறி வெட்டுபவர், சாம்பிராணி தட்டு வைத்து புகை போட்டுபிச்சை எடுப்பவர் போலவும், குண்டு வைப்பவராகவும் ஊடகங்கள் அனைத்தும் வேறு பாடுன்றி முஸ்லிம்களைக் கேவலப்படுத்துகின்றன.]
|
Read more...
|
Friday, 04 January 2013 18:32 |

ஒற்றுமையா.? அல்லாஹ்வின் கயிறா? எது வேண்டும்.?
முஹம்மத் ஆஷிக்
["80-களின் மத்தியில் மதஹப்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான இஸ்லாம் பற்றி மதரசாவில் தான் கசடற கற்ற கல்வியை கூற முற்பட்ட ஒரு சிலரால்தான் 'ஒற்றுமைக்கு' வேட்டு வைக்கப்பட்டது. அதிலிருந்து மக்களை காக்க, அப்போது... ஜும்மா பயான்கள், ஆடியோ கேசட்டுகள், வீதி மேடைகள், சந்தனக்கூடு, கந்தூரி, மீலாது விழாக்கள்... என இங்கெல்லாம் ''ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு திருக்குர்ஆன் வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக தவறாக சொல்லப்பட்டு வந்தது. அவர்கள் கூறும் வசனம் எது என்று தேடிப்பார்த்தால்... அது இதுதான்..!
அல்லாஹ்வின் (ஒற்றுமை எனும்) கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்- 3: 103)
ஆனால், மேற்கண்ட வசனத்தில் பிராக்கட் போட்டு 'ஒற்றுமை'யை வலுக்கட்டாயமாக உள்ளே சொறுகித்தான் நோட்டிஸ் அடித்து பிரச்சாரம் புரிந்தார்கள். 'நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வந்தனர். (இன்னும் இப்படி வெகுசிலர் உள்ளனர்)
"ஓர் ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இஸ்லாம் தடுத்த ஒரு தீமையை செய்தால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் எப்படி கூறுவான்" என்று சிந்தித்த மக்கள் இதுவல்ல ஒற்றுமை என்று தெளியத்துவங்கினர். பிற்காலத்தில் குர்ஆன் தர்ஜுமாக்கள் வந்தவுடன், ஒற்றுமை பற்றியான அந்த வசனத்தை தேடத்துவங்கினர். அதில், ''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று தான் அவ்வசனம் கூறுவதை கண்டனர்.
இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், "அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்" என்றுதான் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பற்றி பிடியுங்கள் என்று இயம்புகின்றது.]
|
Read more...
|
Monday, 16 April 2012 19:14 |

வசிக்கும் வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், "நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்".
பல கஷ்டங்கள், பிரச்சனைகளை வெளியில் சந்தித்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள். இல்லத்திற்குள் நுழைந்த பிறகு நிம்மதி இருக்க வேண்டும்.
''வீடு கட்ட நாடினால், ஹலாலான பணத்தில் கட்டுங்கள். ஹராமான வழியில் ஈட்டிய பொருளால் கட்டாதீர்கள். அவ்வீட்டில் நிம்மதியாக இருக்க மாட்டீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கு மாறாக நடப்பவர்களுடைய சொகுசு வாழ்க்கையைக் காணும் கஷ்டவாதிகள் பொறாமைப்படுகின்றனர். அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள், "அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடக்கும் அவர்களை நீங்கள் உயர்வாகப் பார்க்கிறீர்களா?
அல்லாஹ், பயமில்லாமல் வாழக்கூடியவர்களுக்கு அனைத்து வகையான சுகபோக வாசல்களையும் அல்லாஹ் திறந்துவிடுகிறான். விட்டுப் பிடிக்கிறான். சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் ஆடி, திமிர் அதிகமாகும்போது தகுந்த நேரத்தில் இறுக்கிப் பிடிக்கிறான் (என்று கூறிவிட்டு) இந்த வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காண்பிக்கிறார்கள். "என்னுடைய பிடி கடினமான பிடி".
|
Read more...
|
Friday, 21 September 2012 19:53 |

இழப்புக்குள்ளான சமூக அந்தஸ்து...?
ஒரு அமைப்பு நிறுவனம் தன்னைப் பேசுவதற்காக அழைத்திருக்கிறது. தமக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகம் தனக்கு கௌரவப் பட்டம் தரவிருக்கிறது. பரிசுகள் பெறாதவர் வீண் மனிதர். விருது பெறாதவர் வாழத் தகுதியற்றவர். பெயருக்கு முன்னும் பின்னும் ''செந்தமிழ் முத்துமணி''. ''தமிழ்க் குன்றுமணி'' டைட்டில் இல்லையா? வெட்கக்கேடு! இத்தகைய கற்பிதங்கள், பெருமைகள் சொல், செயல், பதிவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஏதோ ஓர் வழியில் பணத்தேடல் நடக்கிறது. இரு தலைமுறை அனுபவிக்குமளவு இருப்பு சேர்ந்ததும் பயணம் சமூகத்துக்குள் அந்தஸ்து தேடுகிறது. பணத்தின் வழியாக அடைய முனைகிறது. சுய பகட்டு, தம்பட்டம், வெளிச்சத்துக்கு மனம் ஏக்கமுற்று ஆசை அலைபாய்கிறது.
சில சமூகத்தவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னம் தொலைநோக்குச் சிந்தனையுடன் ஆக்கப்பூர்வ பயனுக்கு பல நூறு ஏக்கர் நிலத்தை வளைத்தனர். வகைப்படுத்தினர். நிறுவனங்களை மக்களுக்காக, தமது சமூகத்தவருக்காக ஏற்படுத்தினர். வேர் விட்டன. விரிந்து படர்ந்தன. பரவின கிளைகள். இளைப்பாற, பயனெடுக்க படையெடுத்தனர். ஏதோ ஓர் சமூகத்தவர் உழைப்பில் மற்ற சமூகங்களும் குளிர்காய்ந்தன.
அதே காலக்கட்டத்தில் முஸ்லிம் செல்வந்தர்களும் வாழ்ந்தனர். பரவலாக பல நூறு, ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையிருப்பில் இருந்தன. சொத்துக்களுக்கு டிரஸ்ட் அமைத்து உறவினர்களை பொறுப்பாளிகளாக நியமிக்கும் போக்கும், வஃக்பு செய்தால் புண்ணியம் நினைப்புகளுமே மேலோங்கியிருந்திருக்கின்றன. மற்றோர் செயல்படுத்திக்காட்டிய தன்மைகள் உணரப்படவும், உள்வாங்கப்படவுமில்லை. மறைபெற்ற சமூகத்திலிருந்தும் கூர்மை இல்லா நிலை ஆட்கொண்டிருந்திருக்கிறது.
|
Read more...
|
|
|