Tuesday, 19 January 2016 07:26 |

நீதிபதி பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: நேஷனல் லாயர்ஸ் நெட்வொர்க்' (NLN) தகவல்!
மாநில உயர்நீதிமன்றங்களில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 601 .
முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 மட்டுமே..!
அதிலும் 10க்கும் மேற்பட்டோர், இந்த ஆண்டிலேயே ஒய்வு பெற உள்ளனர்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 14.2% உள்ள முஸ்லிம்களின் விகிதாச்சாரப்படி 86 முஸ்லிம்கள், மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருக்கவேண்டும்.
போதிய தகுதிகள் இருந்தும் நீதிபதி நியமனங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
|
Read more...
|
Friday, 08 July 2016 12:06 |

அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள்
ஆளூர் ஷாநவாஸ்
கோவை, பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட மதானியும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சட்ட உதவி வழங்குவதாக சித்தரிக்கப்பட்ட ஒவைசியும், பங்களாதேஸ் பயங்கரவாதிகளுக்கு தூண்டுகோலாய் இருந்ததாக பழி சுமத்தப்படும் ஜாகிர் நாயக்கும் நாடறிந்த ஆளுமைகள்.
சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அறவழியில் பயணிப்பவர்கள்.
அத்தகைய இவர்களை அதிகார வர்க்கம் குறிவைப்பது ஏன்? பயங்கரவாதத்தோடு இவர்களை இணைப்பது எதனால்?
|
Read more...
|
Friday, 06 May 2016 06:24 |

அமெரிக்க முஸ்லிம்கள்
ஆரூர். யூசுப்தீன்
சமீபத்திய ஒரு செய்தி முஸ்லிம்கள் அனைவரின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. அச்செய்தி உணர்த்தும் பொருள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் இனி அமெரிக்காவில் நுழைய அனுமதிக்க கூடாது என்று அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் கூறிய செய்திதான் அது.
உண்மையில் டொனால்ட் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஏற்பட்ட மாற்றத்தினால் வெளிவந்தவை. கடந்தகால நிகழ்வுகளில் முஸ்லிம்கள் மீது ஆதிக்கவர்க்கம் திணித்த பொய்யான குற்றசாட்டுகள் தான் இதற்கு முக்கிய காரணிகள்.
அமெரிக்காவின் நவீன வரலாற்றில் முஸ்லிம்கள் இருப்பு 20ஆம் நூற்றாண்டுகளில் மட்டும் தான் காணப்படுகிறது.
உண்மையில் அமெரிக்காவின் ஆக்கம், உருவாக்கம், வளர்ச்சி மற்றும் நிலைநிறுத்தல் ஆகிய அனைத்து பக்கங்களையும் முஸ்லிம்கள் நிரப்பியுள்ளனர்.
|
Read more...
|
Friday, 19 June 2015 04:21 |

கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் 15 கேள்விகள்!
[வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக் கூடாது?]
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற கடுமையான உத்தரவும் மக்களை திசை திருப்பியும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக் கல்விக்கே பல ஆயிரங்களை இழந்து நிம்மதியைத் தொலைத்த மக்கள் மீண்டும் ஹெல்மெட் மூலம் நிம்மதி இழக்கின்றனர்.
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சட்டத்துக்கு உட்பட்டே வாழ்கிறோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் அதிகம் உபயோகிக்கும் வாகனமான இரு சக்கர வாகனத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடா? இரு சக்கர வாகனத்தில் இருந்து கடன் வாங்கியாவது கார் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார் விற்பனை மேலும் உயரும். இதனால், மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் எனபதே உண்மை.
குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத 'வசூல் கடமை' செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் 'சாதனைகள்' தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள்.
|
Read more...
|
Monday, 03 October 2011 08:05 |

அதிகரிக்கும் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 60 வயதை கடந்தோர் 9.84 கோடி பேர்
டெல்லி: 2011ம் ஆண்டில் இந்தியாவில் 60 வயதைக் கட்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 9.84 கோடியாக அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 7.7 கோடியாக இருந்தது. இதில் ஆண்கள் 3.8 கோடி, பெண்கள் 3.9 கோடி பேர்.
மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்கள் 7.5 சதவீதம் உள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியைவிட மூத்த குடி மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
|
Read more...
|
Monday, 07 December 2015 09:00 |

உள்ளதைச் சொல்கிறேன் - ராஜ்குமார்
சிலர் சினம் கொள்கிறீர்கள் எனக்கு இசுலாமிய அமைப்புகளைப் பாராட்ட எந்த அவசியமும் இல்லை. இன்று சென்னை அம்பேத்கர் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் 5,000 பேருக்கு இசுலாமிய அமைப்புகள் உணவும் நீரும் கொடுத்துள்ளன,. இது நியூஷ் 7 டிவியிலும் இப்போ இரவு 11.20ப்ம் கு காட்டப்பட்டது.
எந்த முஸ்லிமும் செல்பி எடுத்து அனுப்பல,. பேச்சும் கொடுக்கல ஆனா ஊடகங்கள் தான் இன்று அவர்களைப் படம் எடுக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள ஒவ்வொரு இடத்திலும் இசுலாமியர்கள் உதவிக் கொண்டு இருக்கிறார்கள். கேமராவும், ராணுவமும் நுழையாத இடங்களிலும் உள்ளார்கள்.,
"இதில் மதப்பெயர ஏன் சொல்லுரீங்க"நு சிலர் கேட்கறீங்க., யாரோ யாரயோ அடிச்சப்போ., யாரோ திருடுநப்போ, யாரோ ஏதோ செஞ்சப்போ முஸ்லிம், முஸ்லிம், இசுலாமியர் என்று கடந்த காலத்தில் மதத்தோடு தொடர்பு படுத்தித் தானே கேவலப்படுத்துனோம்., (தனி மனித தவறுக்கு)
இப்போ நல்லத அந்த சமூகமே சேந்து செய்யுரப்போ மதத்த சேக்காம இசுலாமியன்னு சொல்லாம., பிரிச்சு பேசச் சொன்னா எப்படி?, தொட்டதுக்கெல்லாம் அவங்க மதத்தோட தொடர்பு படுத்திப் பேச கத்துக் கொடுத்ததே நீங்க (ஊடகம், பஜக.RSS) தானே..!
நாங்கல்லம் செய்யலயானு சிலர் கேட்கரீங்க., நீங்களும் செய்யரீங்க ஆள் பாத்து ஒரு சின்ன தெருவுக்குள் குறுகிய அளவில் சில எல்லை வரையறைகளோடு.,
இன்னைக்கு கோயில்ல இருக்கரவங்களும் ஒரு இசுலாமியன் கோவில் உள்ள வந்தா அவன் நீரும், சோறும் கொண்டு வருவான்னு ஆவலோடு பாக்கறாங்க மக்கள்.,
|
Read more...
|
Sunday, 05 January 2014 06:39 |

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை!
முஸ்லிம்களே பேராபத்தைச் சந்திக்கப் போகிறீர்கள்!
1. “.....முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை”. (10:103)
2. ”...முஃமின்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான்” (22:38)
3. “....முஃமின்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை”. (30:47)
4. “....தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப் படாதீர்கள்! முஃமின்களாய் இருப்பின் நீங்களே மேலோங்குபவர்கள்”. (3:139)
5. “முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாய் ஆக்கியது போல் உங்களில் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிபவர்களை பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், அவர்களுக்கென அவன் பொருந்தியுள்ள மார்க்கத்தில் அவர்களை உறுதிப் படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அமைதியானதாய் மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எவரையும் இணை வைக்காமல் எனக்கே அடிபவணிவார்கள். இதன் பின்னர் மாறு செய்வோரே பாவிகள்” (24:55)
6. “அல்லாஹ் வாக்குறுதி மீறவே மாட்டான்” (3:9,194, 13:31, 39:20)
7. “...நீர் எவ்வளவுதான் விரும்பினாலும் மனிதர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்வதாக இல்லை.” (12:103)
8. “அவர்களில் அநேகர் இணை வைப்பவர்களாய் இருக்கிற நிலையில் அல்லாமல் அல்லாஹ்வை நம்புபவர்களாய் இல்லை”. (12:106)
|
Read more...
|
Tuesday, 19 February 2013 19:12 |

உடல் ஆரோக்கியத்துக்கு நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு!
ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்
-என்பது பழமொழி.
நீர் + ஆகாரம் = நீராகாரம். மீதமானச் சோற்றில், அச்சோறு கெடாமல் இருக்க, அச்சோறு முழுகும் அளவுக்கு நீரை ஊற்றுவர். அந்நீரால், அச்சோறு அடுத்த நாள் கெடாமல் இருக்கும். அடுத்த நாள் அச்சோற்றுக்கு மேலே இருக்கும் நீரை (சில நேரங்களில் அச்சோற்றை அந்நீரில் கரைத்தும்) உண்பர். இதுவே நீராகாரம். சத்துள்ள திரவநிலை உணவாக இது கருதப்படுகிறது.
நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு! கிராமங்களில் வயல்வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகும். இதில் அடங்கியிருக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் நகரத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக கிராமத்தார்களைப் பார்த்து பொறாமை ஏற்படவே செய்யும்.
முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் விட்டமின் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் "ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்" (கவனியுங்கள்- மில்லியன் அல்ல "ட்ரில்லியன்") பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.
|
Read more...
|
Wednesday, 13 March 2013 06:13 |

ஹோமியோபதி - ஓர் விளக்கம்
ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர், மருத்துவச் சீர்திருத்தவாதி, ஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் (1755-1843) தான் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும் இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது.
1810 இல் தமது வேதப்புத்தகமான ஆர்கனான் நூலை வெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும்.
இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும், ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்!
அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும் போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சில மருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது.
|
Read more...
|
Thursday, 02 January 2014 10:48 |

மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். செல்வாக்குள்ள மனிதர் யாரையாவது பார்த்தால் அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா என்று பேசிக் கொள்வது உண்டு. சாஸ்திர சம்பிரதாயத்தில் கூட மச்சத்துக்கு பலன் உண்டு என்று கூறுவார்கள். எங்கெங்கு மச்சம் இருக்கிறதோ அதற்கான பலன்கள் என்ன வென்றும் கணித்து கூறுகிறார்கள்.
உண்மையில் மச்சம் என்பது அதிர்ஷ்டம் அல்ல, நோய் ஆபத்தின் அறிகுறி என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் எம்.என்.சங்கர். அவர் இங்கே விவரிக்கிறார். அக்குபங்சர் மருத்துவ தத்துவத்தின்படி உடலின் ரகசியபுள்ளிகளில் ஏற்படும் மச்சங்கள் மற்றும் நிறமாற் றங்களை வைத்தே நோயாளியின் நோயை மிக எளிதாக கணிக்க முடியும்.
ஆம்! பல மச்சங்கள் நோயின் அறிகுறியே! மச்சங்களை கிள்ளியெடுத்து மைக்ராஸ் கோப்பின் அடியில் வைத்து `எபிடொமிஸ்’ என்றும், `மெலனோசைட்’ என்றும் கூறி புற்றுநோயாகவும் இருக்கலாம் என்று ஆங்கில மருத்துவ விஞ்ஞானிகள் பயமுறுத்துவது உண்டு! மச்சங்கள் உருவாவது பல சமயங்களில் உடல் உறுப்புகளின் நோயை வெளிக்காட்டும் இயற்கையின் அபாய அறிவிப்பே ஆகும்.
|
Read more...
|
Friday, 11 June 2010 21:52 |

ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? தயங்குகிறோம்?
எது ஆடுகிறதோ அதுவால்.
எது சிந்திக்கிறதோ அது தலை.
மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எது?
எத்தகைய கின்னஸ் சாதனைகள் இருக்கின்றதோ, அத்தனையும் விட உயர்வானது எது?
சிந்திப்பது! ஆம். அதுவேதான்.
|
Read more...
|
Friday, 06 September 2013 06:13 |

அபுல் அஃலா மெளதூதி
அநீதியும் அக்கிரமமும் ஒழிக்கப்பட வேண்டுமானால்... நீங்கள் சற்று ஆழ்ந்து நோக்கினால் உங்கள் வாழ்க்கையின் கேடுகளுக்கு அறியாமையைத் தவிர மற்றொரு காரணமும் புலப்படும்.
ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ மனிதன் என்ற பெயரல்ல என்பதைப் புரிந்து கொள்ளச் சொற்ப அறிவு போதுமானது.
எல்லா மக்களும் மனித குலத்தின் அங்கங்களே. மக்கள் அனைவருக்கும் வாழும் உரிமை உள்ளது. தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அனைவரும் உரிமையுடையவர்களே! அனைவரும் அமைதி, நீதி, மரியாதை, கண்ணியம் ஆகியவற்றிற்கு உரியவர்களே!
|
Read more...
|
Thursday, 21 January 2010 09:43 |

[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ''உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்''. (நூல்: புகாரி) . இது ஜும்ஆவுக்கு மட்டுமின்றி எல்லா நேரத்துக்கும் பொருந்தும்.
சென்னை போன்ற நகரங்களில், இமாம் தமிழிலோ உருது மொழியிலோ பயானை முடித்துவிட்டு 'மிம்பரில் குத்பா' ஓதுவதற்கு முன், சுன்னத்து தொழுவதற்காக ஐந்து நிமிடங்கள் இடைவெளி கொடுக்கப்படுவதால் மஸ்ஜிதுக்குள் நுழையும் பலர், உள்ளே நூழைந்தவுடன் சுன்னத்தான 'தஹிய்யத்துல் மஸ்ஜித்' இரண்டு ரக் அத்தை தொழுகாமல் அப்படியே உட்கார்ந்து விடுவதை வழமையாக காண்கிறோம்.
இந்த குறையைப் பற்றி எந்த இமாமும் மக்களுக்கு எடுத்துச் சொன்னதாகத் தெறியவில்லை. மாதம் ஒரு முறையாவது மக்களுக்கு இதை நினைவுப்படுத்துவது சிறப்பானதாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தை உயிர்ப்பிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும், அதுவும் இறையில்லத்துக்குள்.]
|
Read more...
|
Friday, 26 August 2011 11:52 |

பெண் என்பவள் யார்?
பெண் என்பவள் யார்?
அவளின் குணாதிசயங்கள் யாவை?
அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?
அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
- ஏன்? பெண் என்பவன் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகிறான்.
‘கடலின் ஆழத்தைவிட ஆழமானது பெண்ணின் மனம்’ என்பார்கள். உலகில், எழுதப்பட்ட இலக்கியங்களில் பெரும்பங்கு - பெண்’ என்ற புதிரைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் எழுதப்பட்டவைதாம். கொஞ்சம் பெரிய சைஸ் காக்கையைப் போல் இருக்கும்.
அழகே இல்லாத ஒரு பெண் மயிலைக் கவர, கம்பீரமான, வானவில்லைப் பல் வண்ணங்களைக் கொண்ட தோகையை உடைய அழகிய ஆண் மயில் ஏன் ஆடிப்பாட வேண்டும்? ஏதோ முட்டையிட்டோம். குஞ்சுபொரித்தோம். இனி அதுவாயிற்று அதன் வாழ்க்கையாயிற்று என்று ‘தேமேய யென சும்மா இராமல் ஒரு தாய்ப் பருந்து ஒருமீனைக் கொன்று ஏன் குஞ்சுக்கு ஊட்ட வேண்டும்? காடும் மேடும் திரிந்து, புல்லும் சருகும் சேர்த்து ஏன் ஒரு கூட்டைக் கட்ட வேண்டும்? இதற்கெல்லாம் விடை ‘அன்பு’ என்பீர்கள்.
அன்பு என்பது என்ன? அது ஒரு இரசாயன மாற்றமா, ஹார்மோன் சுரப்பா, இல்லை வேறு ஏதாவதா? பசிக்கும்போது சாப்பிடுவதைப்போல அன்பு என்பது ஒரு உடலின் தேவையா, இல்லை அதைவிட மேலானதா? சைனாவின் ‘யின் - யாங்’ தத்துவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். "யின்" என்பது பெண் தத்துவம். "யாங்" என்பது ஆண் தத்துவம். யின் என்பது பெண்மை, பூமி, இருள், செயலுக்கு உள்ளாவது. யாங் என்பது ஆண்மை, வானம், வெளிச்சம், செயல்படுவது, ஊடுருவுவது.
|
Read more...
|
Saturday, 29 January 2011 09:11 |
 
ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு!
ஆடுகளை வளர்க்காத நபிமார்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது தூதர்கள் யாவரையும், ஏக இறைவன் அல்லாஹ் ஆடுகளை வளர்க்கும்படிச் செய்தான். இது ஒன்றே இது எவ்வளவு ''பரக்கத்''தான தொழில் என்பதற்கு சாட்சி.
வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.
ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.
ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.
|
Read more...
|
Tuesday, 20 August 2013 10:46 |

எதற்காக ஓடுகிறோம்?
வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால் போதும். மனிதர்களுக்கு ஒரே ஓட்டம்தான். பஸ்ள்ஸப் பிடிக்க வேண்டும். ரயிலைப் பிடிக்க வேண்டும். தொழிற்சாலைக்குச் செல்ல வேண்டும். அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். பல வேலைகள், பல பிரச்னைகள் என நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
எல்லோரும் எங்கே ஓடுகிறோம்? பணம் சம்பாதிக்கவா? பணம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானதுதான். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? லட்சியத்தை அடையவா? லட்சியம் என்பது கடைசி நிலைதானே. அதனை அடைய நாம் செல்லும் பயணம் சுகமானதாக இருக்க வேண்டாமா?
வாழ்வின் முடிவை நோக்கி ஓடுகிறோமா, வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டாமா?
|
Read more...
|
Monday, 03 January 2011 08:26 |
 
நகங்களைப் பாதுகாப்போம்
நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்பதையும் சொல்லிவிடுவார்கள்.
நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது |
Read more...
|
Friday, 26 November 2010 08:04 |
 
சளித்தொல்லையும், விட்டமின் ''C'' யும்
உலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் - Cold என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.
இதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே "சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்".
மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.
வைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நம்பிக்கை. ஆரஞ்சுப்பழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது.
|
Read more...
|
Wednesday, 21 April 2010 08:13 |
 
[ அதிகாலை வேலை ஆண்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து, வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
உண்மையில் இது வெட்கப்பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விஷயமோ அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.
இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.]
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத்தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு என்பதால் குழந்தை பிறக்காவிட்டால் முழுக் குற்றத்தையும் மனைவி மேலேயே சுமத்தி விடுகிறது இந்தச் சமூகம்.
ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக்குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன.
சரி , ஆணிலே மலட்டுத் தன்மை உள்ளதா என்று எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?
|
Read more...
|
Monday, 18 August 2008 09:31 |

மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்?
[ இஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள்.
இத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்?
காரணமிருக்கின்றது! அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால் அது நிச்சயமாக இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றது. காரணம், அதன் மடியில் - இன்னுஞ் சொன்னால் அதன் அடிவயிற்றில் அது கட்டிக் கொண்டிருக்கும பிரச்னைகள்.
இஸ்லாமியப் பிரச்சாரம், அதன் வெற்றி இவர்கள் நுழையவே முடியாது என்று கட்டி வைத்திருக்கும் கோட்டைகளுக்குள் எல்லாம் இன்று இஸ்லாமியப் பிரச்சாரம் புகுந்திருக்கின்றது. இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் அமெரிக்காவில் ஓர் இஸ்லாமிய அலையை உருவாக்கி இருக்கின்றது. எழுந்து வரும் இந்த அலையை எப்படியேனும் முடக்கிப் போட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.]
|
Read more...
|
|
|