Tuesday, 05 May 2020 19:06 |

ரமளான்: தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
அப்துர் ரஹ்மான் உமரி
ரமழான் மாதத்தில் நாம் மிகவும் கவனக்குறைவாக இருப்பதால் பல விஷயங்களில் கோட்டை விட்டு விடுகிறோம். இதன் காரணமாக ரமழானுடைய நன்மைகளை நாம் இழந்து விடுவ தோடு இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாகவும் மாறி விடுகின்ற ஆபத்து இருக்கின்றது. ஆகையால், கீழே குறிப்பிட் டுள்ள செயல்களில் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.
1. தராவீஹ் பிறகு கண் விழித்தல்
தேவையில்லாமல் இரவில் வெகுநேரம் விழித்திருக்கி றோம். தராவீஹ் தொழுகைக்குப் பிறகும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரங் கழித்து தூங்கச் செல்கிறோம். இன்னும் சிலர் ஸஹ்ரு வரை தூங்காமல் இருந்துவிட்டு ஸஹ்ரு செய்த பின்பே தூங்கப் போகிறார்கள்.
அதேபோல, பகலில் சகட்டுமேனிக்கு தூங்குகிறோம். நோன்பிருக் கிறோம் என்னும் போர்வையில் பெரும் சோம்பேறிகளாக மாறிவிடுகிறோம்.
இதே ரமழான் மாதத்தில்தான் பத்ருப் போரும் மக்கா வெற்றி யும் நடந்துள்ளன. நம்மைப்போன்ற சோம்பேறிகளால் இந்த போர்க் களங்களை எல்லாம் சந்திக்க முடியுமா? என கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
2. லுஹர் தொழுகையை விடுதல்
பகலில் ஒருசிலர் லுஹர் தொழுகையைக் கூட தொழாமல் தூங்குகிறார்கள். இன்னும் ஒருசிலர் சுபுஹ் தொழுகையைக் கூட தொழாமல் ‘ஸஹ்ரு’ செய்த களைப்பில் தூங்கப் போய் விடுகிறார்கள். நோன்புக் காலத்தில் லுஹர் தொழுகையும் அசர் தொழுகையும் பரிதாபமான நிலைக்கு ஆளாகி விடுகின்றன.
|
Read more...
|
Thursday, 19 August 2010 13:00 |

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
|
Read more...
|
Friday, 08 November 2013 06:08 |

ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்!
இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது.
அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.
இறைவனது இந்த சட்டதிட்டங்களை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஏற்று நடப்பார்களேயானால், இவ்வுலக வாழ்க்கையே சுவர்க்கலோக வாழ்க்கையாக ஆகிவிடும்.
|
Read more...
|
Monday, 20 April 2020 07:40 |

ரமளான் மாதத்தை வீணாக்கிவிட வேண்டாம்
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)
நாம் வாழ்க்கையில் நம்முடைய நேரங்களை வீணாக கழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொழுதை கழிப்பதாக சொல்லிக்கொண்டு நாம் ஏதாவது ஒன்றை வீணாக செய்துகொண்டுதான் வருகிறோம்! பொழுது எப்படியும் அது கழிந்துவிடும். நாம் சும்மா இருந்தாலும் அல்லது ஏதாவது செய்துகொண்டு இருந்தாலும் நேரம் கழிய தான் செய்யும்! ஓகே நல்லது!
இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி வந்துகொண்டுயிருக்கிறது. இன்று நம்மில் நிறைய பேர்கள் கொரோனாவை பற்றி தான் பேசுகிறார்கள், ரமலான் பற்றி இன்னும் யாரும் பதிவு போடவில்லை. சமூகவலைத்தளங்களில் நாம் பெரும்பாலும் நேரத்தை கழிக்கின்றோம்.
|
Read more...
|
Saturday, 28 May 2011 08:14 |

தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்!
o இரகசியமாக தர்மம் செய்தல்.
o ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல்.
o தாராளமாக தர்மம் செய்தல்.
o சிறந்தவற்றையும் ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல்.
நாம் செய்யவேண்டிய தர்மங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? இஸ்லாம் எந்த வகையில் தர்மம் செய்யவேண்டும் என்று நமக்கு சொல்கிறது?
குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்வோம்:
|
Read more...
|
Friday, 08 June 2012 08:28 |
தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்
o வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்
o ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை
o நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு
o செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள்
o சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு
o இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை
o ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்
o பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம்
|
Read more...
|
Sunday, 15 August 2010 10:26 |

தங்கம் & வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை!
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
"யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்" அல்-குர்ஆன் (9: 34 & 35).
|
Read more...
|
Wednesday, 24 August 2011 11:25 |

அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று அல்குர்ஆன் 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான்.
அந்த வசனம் வருமாறு:
o (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும்,
o ஏழைகளுக்கும்,
o தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
o (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும்,
o அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
o கடன்பட்டிருப்பதற்காகவும்,
o அல்லாஹ்வின் பாதையிலும்,
o வழிக்போக்கர்களுக்கும் உரியவை.
(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.) (அல்குர்ஆன் 9:60)
|
Read more...
|
Saturday, 18 June 2016 19:13 |

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்
o 1, 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.
o சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!
உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர். அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.
o ‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.
|
Read more...
|
Thursday, 09 June 2016 04:10 |

மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே.
ஆனால் ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம், நிறத்துக்கு நிறம், மொழிக்கு மொழி வேறுபாடுகளும் வேற்றுமை உணர்வுகளும் கொண்ட மனிதகுலத்தை ஒருங்கிணைக்க ஒரு வழி இருக்குமானால் அது இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருக்கும்.
அவ்வழி தனிநபர் ஒழுக்கத்தையும் சமூக ஒற்றுமைக்கான அடிப்படைகளையும் மேம்படுத்துவதாகவும் அமைந்து விட்டால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறாதா?
இஸ்லாம் என்ற இறைமார்க்கம் அதில் இணைந்தவர்களுக்கு விதிக்கும் ஒவ்வொரு கடமைகளிலும் இந்த மனிதகுல ஒருங்கிணைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை ஆராய்வோர் அறியலாம்.
இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் (discipline) என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல் விலக்கலகளை ஏற்று அதன்படி வாழும்போது பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம்!
இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.
|
Read more...
|
Tuesday, 24 January 2017 08:20 |

அந்த ஏழைப் பெண்ணின் ஜகாத்!
நோன்பு 17 அல்லது 18 இருக்கும்..அன்று இஃப்தார் முடித்து சற்று ஓய்வில் இருக்கும் நேரம்..கதவு தட்டப்படும் சத்தம். அதை தொடர்ந்து சலாம் கூறியபடி ஒரு பெண்மணி வீட்டிற்குள் வந்தார். எனக்கு சரியாக அடையாளம் தெரியாததால் யாரும்மா? என்ன விஷயம் என்று கேட்டதும்,
”வாப்பா! நான் தான் வாப்பா” என்றதும் பொறி தட்டியது போல் ஒரு நினைவு.
ஆம் அந்த பெண் வேறு யாருமில்லை. போன வருடத்திய என் பதிவின் மூலகர்த்தாவான அதே பெண்.
உலகம் முழுவதும் அனைவரையும் அழ வைத்த அதே பெண். அந்த ஏழை மகள் தான்.
''என்னம்மா எப்படி இருக்கிறாய்?'' என விசாரித்ததும், வாப்பா! நல்லா இருக்கேன் வாப்பா.. போன வருடம் யாரோ ஒருவர் கொடுத்ததாக ஒரு தொகையை ஜகாத்தாக தந்தீர்கள். அதில் பெருநாள் துணிமணி மற்றும் பெருநாள் செலவுகள் போக மீதமிருந்த பணத்தில் வீட்டிலேயே இடியாப்பம் சுட்டு வியாபாரம் செய்து வருகிறேன். நிறைய பேர் வீட்டுக்கு வந்து வாங்கி செல்கின்றனர். இப்போது ஒரளவு நல்ல நிலையில் இருக்கிறேன் வாப்பா'' என்றவள்,
|
Read more...
|
Sunday, 22 August 2010 15:44 |

வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது!
"தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 2:271)
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்!
நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:
1) நீதிமிக்க அரசன்.
2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
|
Read more...
|
Sunday, 26 May 2019 13:18 |

நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்!
புனிதமிக்க ரமலானின் இறுதிக் காலகட்டத்தை அடைந்துள்ளோம். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கதர் எனும் சிறப்புமிக்க இரவை தாங்கி வரும் இந்த இறுதிப் பத்தில், இறைவன் நிராகரிப்பாளர்களுக்காகவும் -இணைவைப்பாளர்களுக்காகவும் - பாவிகளுக்ககவும் சித்தப்படுத்தியுள்ள நரகத்திலிருந்து பாதுகாப்புப்பெற எஞ்சியுள்ள புனித ரமலானை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும்.
ஆனால், துரதிஷ்டவசமாக அமல்களை கொண்டு அழகுபடுத்த வேண்டிய இந்த நாட்களை, அழகான ஆடைகள் எடுப்பதிலும், அழகுசாதன பொருட்களை வாங்குவதிலும், வீட்டை அழகுபடுத்துவதிலும் சமுதாய மக்கள் கூடுதல் கவனம் செலுத்துவதை பார்க்கிறோம்.
இதற்கு காரணம் நரகம் எவ்வளவு கடுமையானது என்பதை அறியாமலிருப்பதுதான். இன்னும் சிலர் நரகத்தை வேடிக்கையாககருதுவதையும் பார்க்கிறோம்.
|
Read more...
|
Monday, 27 April 2020 13:23 |

சிறு வயதில் நோன்பு பிடிக்காதவர்கள் என்ன செய்வது?
சிறு வயதிலிருந்தே நோன்பு பிடிக்காதவர்கள் எத்தனை நோன்புகள் விடுபட்டுள்ளன என்பது தெரியாத நிலையில் விடுபட்ட நோன்புகள் எத்தனை நோற்க வேண்டும்?
விடுபட்ட நோன்புகளைப் பிடிக்காதவர்கள் சுன்னத்தான நோன்புகளை வைக்கக் கூடாது என்கிறார்களே, இது சரியா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"மூன்று பேரை விட்டு எழுது கோல் உயர்த்தப் பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை.
2. சிறுவன் பெரியவராகும் வரை.
3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை."
(அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: *நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031)
|
Read more...
|
Sunday, 15 May 2011 06:23 |

சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா?
மஅன் பின் யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார்.
நான் சென்று அவற்றை வாங்கிக் கொண்டேன். அந்தத் தங்க நாணயங்களுடன் என் தந்தையிடம் வந்தேன்.
அவரோ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உனக்கென நினைக்கவில்லையே! என்றார். நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றேன். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: யஜீதே! நீ நினைத்தது உனக்கு. மஅனே! நீ பெற்றுக் கொண்டது உனக்கு. (நூல்: புகாரி)
இந்த நபிமொழி சுவையானதும் சிந்தனைக்குரியதுமான நிகழ்ச்சி ஒன்றை எடுத்துரைக்கிறது.
நபித்தோழராகிய யஜீத் ரளியல்லாஹு அன்ஹு சில தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு தர்மம் செய்வதற்காக பள்ளிவாசல் சென்றபோது அங்கு ஏழைகள் யாரும் இல்லை. அங்கே அமர்ந்திருந்த ஒருவரிடம் சென்று யாராவது ஏழை எளியவர் வந்தால் அவருக்கு என் சார்பாக இவற்றை வழங்கவும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு வந்தார்.
|
Read more...
|
Wednesday, 14 April 2021 21:41 |

குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள்
சகோதரர்களே! எந்தக் குர்ஆன் உங்கள் கைகளில் உள்ளதோ - எந்த குர்ஆனை நீங்கள் ஓதுகிறீர்களோ, செவி மடுக்கிறீர்களோ, மனப்பாடம் செய்கிறீர்களோ, எழுதுகிறீர்களோ அந்தக் குர்ஆன் - அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய-முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வின் வேதவாக்கு.
அது அவனது உறுதியான கயிறு. அவனது நேர்வழி.
பாக்கியமிக்க நல்லுரை. மிகத் தெளிவான ஒளி ஆகும்.
மெய்யாகவே அல்லாஹ் அதனை மொழிந்தான்.
அந்த மொழிதல், அவனது கண்ணியத்திற்கும் மாட்சி மைக்கும் ஏற்றமுறையில் அமைந்திருந்தது.
தன்னிடம் நெருக்கமான,கண்ணியமிக்க மலக்குகளில் ஒருவரான நம்பிக்கைக்குரிய ஜிப்ரீல் மீது அல்லாஹ் அதனை சுமத்தினான்.
அவர் அதை முஹம்மத் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறக்கியருளினார்.
தெளிவான அரபி மொழியில் எச்சரிக்கை செய்பவர்களுள் ஒருவராக அவர்கள் திகழ வேண்டும் என்பதே குறிக்கோள்.
அல்லாஹ், இந்த குர்ஆனை மகத்தான தன்மைகளைக் கொண்டு புகழ்ந்துரைத்தான். நீங்கள் அதனைக் கண்ணியப்படுத்த வேண்டும், கௌரவிக்கவேண்டும் என்பதற்காக!
|
Read more...
|
Wednesday, 03 September 2014 06:48 |

அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 33)
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28)
ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)
|
Read more...
|
Sunday, 29 March 2015 07:02 |

குர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு பார்வை!
பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை - 86:11
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற அறிவியல் விளக்கம் - 4:56
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை - 6:125
பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற உண்மை - 2:36, 7:24, 7:25
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை - 16:79, 67:19
விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை - 17:37
|
Read more...
|
Monday, 13 July 2015 23:12 |

இலாஹ் - இறைவன்: சொற்பொருள் ஆய்வு
பல இஸ்லாமிய சகோதரர்களுக்கு தங்களுடைய இறைமையியல் தத்துவங்கள் சரியாக தெரியாமல் இருக்கிறார்கள்.
விளைவு...
தர்ஹா வழிபாடு போன்ற ஒரிறைக்கு எதிரான திசை நோக்கி போய் விடுகிறார்கள்.
அவர்களுக்கு சரியான விளக்கமளிப்பதற்காகவே இப்பதிவு.
குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும்.
இதர மதங்களும், நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர்.
ஆனால் இஸ்லாம் ஒரிறைக் கொள்கையில் ஏகத்துவ நெறியில் இன்றுவரை நிலைத்துநின்று நீடு புகழ் கொண்டுள்ளது. ‘இலாஹ்’ என்கிற இந்த சொல் குர்ஆனில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல். இந்த சொல்லின் உண்மையான பொருளை ஒருவர் விளங்கிக் கொண்டால் இணைவைப்பின் பக்கம் அவர் தலைவைத்தும் படுக்கமாட்டார். இணைவைப்புச் சிந்தனை அவருடைய கனவிலும் தோன்றாது.
|
Read more...
|
Saturday, 26 August 2017 08:06 |

கட்டாயமாக படிக்க வேண்டும்! ஏன்?
o ஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது!
o உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது!
o மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இலக்கியம் அது!
o உலகில் வேறெந்த இலக்கியங்களும் வாதிடாத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக வாதிடுகிறது அது! பாருங்கள்!
o மிக மிக உயர்ந்தவனே தனது ஆசிரியன் என்று வாதிடுகிறது அது!
|
Read more...
|
|
|