Monday, 19 November 2012 21:37 |

ஆலிம்களுக்கு அன்பு வேண்டுகோள்!
கண்ணியமிக்க ஆலிம்களே, இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்தை உறுதிபடுத்த, மக்களுக்கு மத்தியில் உண்மையை சொல்லி, ஏகத்துவத்தின் பக்கம் அழைக்க முற்பட்ட தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறைஷி காஃபிர்களுக்கு மத்தியில் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், ஆளாகி, தனக்கு வல்ல அல்லாஹ் அளித்த திருமறைப்படி மக்களை அழைத்து, இதுதான் இஸ்லாம் – இப்படித்தான் அல்லாஹ் நம்மை நடக்கச் சொல்லி உள்ளான் என்றும், சிறு விஷயம் முதல் பெரிய விஷயம் வரையிலும் எடுத்துரைத்தார்கள்.
அன்று வாழ்ந்த மக்களில் ஒரு கூட்டம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கல்லாதவர், அவர் சொல்வதை நாம் கேட்பதா? நமது அந்தஸ்த்து என்ன? கெளரவம் என்ன? என்று வரட்டுக் கெளரவம் பாராமல் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்-செயல்-அங்கீகாரப்படி ஒரு விஷயத்தை கூட விடாமல் பின்பற்றி நடந்தார்கள். அவர்களே நபித்தோழர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்கள் எதை எப்படி சொன்னார்களோ, அதை அப்படியே செய்து, எதை தடுத்தார்களோ அவற்றைத் தடுத்து வாழ்ந்தார்கள், உத்தம சஹாபாக்கள், நான்கு கலீபாக்கள், தாபியீன்கள், தபஅதாபியீன்கள், ஏன் அந்த நான்கு இமாம்கள் கூட, குர்ஆன் ஹதீஸ்படி தான் வாழ்ந்து மக்களுக்கு உண்மையான மார்க்கத்தைச் சொல்ல, தங்களின் உயிரையே பணயமாக வைத்துப் போராடினார்கள், போதித்தார்கள்.
|
Read more...
|
Wednesday, 05 December 2012 10:40 |

தவறைச் சுட்டிக்காண்பிக்காமல் இருக்க முடியாது..
முகநூலிலிலும், மற்ற இடங்களிலும் சக நட்பிடத்தில் தவறுகள் காணப்பட்டால்....
ஒரு சிலரைத் தவிர... பெரும்பாலோர் சுட்டிக் காட்டுவதில்லை...
காரணம்..
நமக்கேன் வம்பு...? என்றுதான் பலர் ஒதுங்குவதற்கு அடிப்படைக் காரணம்..
உண்மையில் ஒரு முஸ்லிம் அப்படி இருக்கலாமா..?
தவறைக் கண்டும், அதைச் சுட்டிக் காட்டாமல் ஒதுங்குவது ஒரு உண்மை முஸ்லிமுக்கு அழகாக இல்லை.
தவறைச் சுட்டிக் காட்டினால்..நட்பு தவறாக நினைக்குமே...? என்று நினைக்கிறீர்களா...?
அப்படிப்பட்ட நட்பு நமக்குத் தேவையில்லை
என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு...
|
Read more...
|
Friday, 30 March 2012 21:49 |

வழிகேடர்களை அடையாளம் காட்டுவதின் அவசியம்!
சிலர் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம், (வழிகேடர்களை) வெளிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள்.
அதற்கவர்கள்," நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள்?" என பதில் அளித்தார்.
ஒருவர், தொழுது கொண்டு, நோன்பை நோர்த்து, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று, அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்கப்பட்டது.
|
Read more...
|
Saturday, 17 March 2012 15:12 |

தாவத் நெருக்கடிகள் !
[ ஐம்பது ஆண்டுகள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் மத பிரச்சார பீடங்களை அலங்கரித்தவர்கள் ஒரே ஒருவரையும் இஸ்லாம் மதத்துக்குள் நுழைக்கவில்லை. களப்பணி காட்டும் உண்மை புள்ளிவிவரம் இது.]
இந்துக்களை முஸ்லிமாக மாற்றுவது, தாவத் பணி இலக்கு.
அரசாங்கம் இந்துக்களின் பெரும் ஆதரவில் நிலைநிறுத்தப்படுகிறது.
மதமாற்றம் சொல்லாட்சி மிகக் குறுகலானது. சிக்கலை வரவழைக்கும். காவல்துறை, நீதிமன்றம், பாயும். முகமூடி தேவைப்படுகிறது. ‘‘அழைப்புப் பணி’’ சொல் பயன்தருகிறது. பாதுகாப்பு கிடைக்கும்.
இந்து சமுதாயத்தில் ஒருவரும் மதம் மாற தயாராயில்லை.
குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் அரசின் பல சலுகைகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டுள்ளனர். பண வசதி, வேலை வாய்ப்பு, கல்வி, விடுதி சலுகை, கடன் தள்ளுபடி, சுகத்தை தியாகம் செய்ய யாரும் விரும்புவதில்லை.
எண்பது ஆண்டுகள் முன்னர், ‘‘மேடை முதலாளிகள்’’ நெல்லை சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் மத மாற்றம் செய்தனர். தொடர்ந்து வந்த மாநில, மத்திய அரசுகள் தாழ்த்தப்பட்ட குடிகளை கல்வி, பொருளாதார நிலைகளில் உயரே தூக்கி நிறுத்தின. மதமாற்றம் அவசியப்படவில்லை.
|
Read more...
|
Thursday, 03 May 2012 17:34 |
 
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும்
[ மனித வாழ்வு இவ்வுலகில் அர்த்தமற்று முடிந்து விடுவதில்லை. மண்ணோடு மண்ணாகி அழிவது மனிதன் என்ற சிருஷ்டியின் வாழ்வுக்கான பொருளன்று. நிரந்தரமாக வாழப் பிறந்தவன். அவ்வாழ்வின் முதற் கட்டமாக இந்த உலக வாழ்வு பரிசோதனையாக அமைந்துள்ளது. இதுவே மறுமை நாள் நம்பிக்கை.
இவ்விரு அடிப்படை நம்பிக்கைகளை ஒட்டியே ஏனைய நம்பிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நம்பிக்கைகள் உண்மையில் இப்பிரபஞ்சம், மனித வாழ்வுக்கான விளக்கம். பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் அறிவுபூர்வமான முடிவுகள். இப் பின்னணியில் இந்த நம்பிக்கைகள் அறிவுபூர்வமாகப் புரியப்படவேண்டும். சிந்தனையின் விளைவாக இந்த அறிவு பெறப்பட வேண்டும் என அல்குர்ஆன் எதிர்பார்க்கிறது.
பிரபஞ்சம் பற்றிய ஆய்வு, சிந்தனை- அறிவு- ஈமான். இவ்வாறு ஒன்றன் விளைவாக ஒன்றை அல்குர்ஆன் காண்கிறது. கண்ணை மூடிக்கொண்டு ஈமான் கொள்ளல் என்பது அல்குர்ஆனைப் பொறுத்தவரையில்கிடையாது.
எனவே சிந்தனை விளைவாக அறிவு விளைவாக ஈமான் என்ற இந்த அடிப்படை பேணப்படல் ஆன்மீகப் பயிற்றுவித்தலின் இரண்டாவது முக்கிய அடிப்படையாகும். அல்குர்ஆன் இக்கருத்தைக் கீழ்வருமாறு தருகிறது.
'அறிவு பெற்றோர் அது உமது இரட்சகனிடமிருந்து வந்தது என அறிந்து கொள்கிறார்கள். விளைவாக அதனை நம்பிக்கை கொள்கிறார்கள். விளைவாக அவர்களது உள்ளங்கள் பணிந்து விடுகின்றன.. (ஸுரா ஹஜ் - 54)]
|
Read more...
|
Monday, 31 December 2012 06:39 |

உண்மையிலேயே உலமாக்களுக்கு அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால்! (1)
[ நீங்கள் அல்குர்ஆனையும் பின்பற்றவில்லை; ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்றவில்லை; நேர்வழி நடந்த கலீஃபாக்களையும் பின்பற்றவில்லை; நபி தோழர்களையும் பின்பற்றவில்லை; அந்த நான்கு இமாம்களையும் பின்பற்றில்லை; யூத, கிறிஸ்தவ ஊர் பெயர் தெரியாத அநாமதேய பேர்வழிகளின் சுய நலத்துடன் கூடிய கற்பனைக் காவியங்களையே பெரிதும் மதித்துப் போற்றி, அவற்றையே வேத வாக்காகக் கொண்டு, நீங்களும் வழி கெட்டு, பெருங்கொண்ட மக்களையும் வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறீர்கள்.
பிழைப்பை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வழிகேட்டில் செல்லும் பெருங்கொண்ட மக்களைத் திருப்திப்படுத்தி ஆதாயம் அடைய, ஷைத்தானின் தூண்டுதலின் அடிப்படையிலுள்ள அவர்களின் மனோஇச்சைக்கு ஏற்றவாறுதான் நீங்கள் 'பிக்ஹு' என்ற பெயரால் மார்க்க சட்டம் சொல்லுகிறீர்கள். ஷைத்தானின் நேரடி ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இறைவனது நேரடி தெளிவான கருத்துக்களை முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்களின் சுய கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், நீங்கள் எந்த அளவு வழிகேட்டில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராவிட்டாலும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.
சுயநலத்துடன் கற்பனை செய்த பொய்யான இட்டுக்கட்டிய ஹதீஸ்களைக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைகளைப் புறக்கணிக்கிறீர்கள்.
அல்லாஹ்வுடைய சொல்லுக்கும், அவனது தூதருடைய சொல்லுக்கும் மாற்றுக் கருத்துக் கொள்வது பகிரங்கமான வழி கேடு என்றும், அது நிரந்தர நரகில் சேர்க்கும் என்று கூறும் அல்குர்ஆன் 33:36, 66, 67, 68 எச்சரிக்கையின் அடிப்படையிலேயும் கூறுகிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து சிந்தித்து முடிவெடுக்க முன் வாருங்கள்.
மவ்லவிகளாகிய நீங்கள், மார்க்கம் அறியாத முத்தவல்லிகள், தலைவர்கள் முன்னால் கைகட்டி வாய் பொத்தி, அவர்கள் காலால் இடும் கட்டளைகளை நீங்கள் தலையால் நிறைவேற்றிவரும் நிலைமாறி, அந்த முத்தவல்லிகளிலிருந்து, தலைவர்களிலிருந்து, செல்வந்தர்களிலிருந்து அனைவரும், மார்க்க அறிஞர்கள் முன் கைகட்டி, வாய்பொத்தி, அந்த அறிஞர்கள் காலால் இடும் கட்டளைகளை அவர்கள் தலையால் நிறை வேற்றிடும் அற்புதமான நிலை உருவாகிவிடும். இன்றைய மவ்லவிகளாகிய உங்களின் இவ்வுலக வாழ்க்கை நிலை பாழ்பட்டதாக ஆகிவிட்டாலும், உங்களின் மறுஉலக வாழ்க்கையாவது சீர்படுவதுடன் எதிர்கால மார்க்க அறிஞர்களின் எதிர்கால நிலையாவது உயரும். மவ்லவிகளாகிய நீங்கள் தயாராவீர்களா?]
|
Read more...
|
Sunday, 20 May 2012 22:08 |

தமிழை வெறுக்க வேண்டாம்!
[ மத அடிப்படை அதி முக்கியம். தனது தாய் மொழி மீதான ஆளுமையும் அவசியம். ரேஷன்கார்டு வேணும். பாஸ்போட்வேணும். அடையாள அட்டை வேணும். வாழும் உரிமை வேண்டும். தமிழ¢ மட்டும் வேண்டாம். மன்னிக்காது தமிழ்ச் சமூகம். தனிமைப்படுத்தப்படுவோம். கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிக்கு தான் என்னவாக விருக்கிறோம். என்ன ஆகப்போகிறோம். தெரியாது. இந்த தன்மைக்கு சமூகம் தள்ளப்பட முஸ்லிம்கள் காரணமாகக் கூடாது.
தமிழை ஏற்கமாட்டோம். அலுச்சாட்டியம் செய்வோர் குர்ஆனிலாவது ஆளுமை பெற்றிருக்கின்றனரா? இல்லை. ஒருசில ஆயத்துகள் கூட நாவில் வர மறுக்கிறது. யாசின் ஓதத் தெரியாது. சின்ன துஆ கூட தெரிவதில்லை. தமிழையும் வெறுத்து குர்ஆனையும் அறை முன் பார்வைக்கு மட்டும் வைத்து வெகு தூரம் பயணம் சென்றிருக்கின்றோம்.
முஸ்லிம்! அவருக்கு தமிழ் தெரியாது. "நிம்மில்கி இன்னா சொன்னாங்கோ". நம்மிள் செய்தாங்கோ" இவ்வாறு தமிழ் பேசுவது போலவும், கறி வெட்டுபவர், சாம்பிராணி தட்டு வைத்து புகை போட்டுபிச்சை எடுப்பவர் போலவும், குண்டு வைப்பவராகவும் ஊடகங்கள் அனைத்தும் வேறு பாடுன்றி முஸ்லிம்களைக் கேவலப்படுத்துகின்றன.]
|
Read more...
|
Friday, 04 January 2013 18:32 |

ஒற்றுமையா.? அல்லாஹ்வின் கயிறா? எது வேண்டும்.?
முஹம்மத் ஆஷிக்
["80-களின் மத்தியில் மதஹப்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான இஸ்லாம் பற்றி மதரசாவில் தான் கசடற கற்ற கல்வியை கூற முற்பட்ட ஒரு சிலரால்தான் 'ஒற்றுமைக்கு' வேட்டு வைக்கப்பட்டது. அதிலிருந்து மக்களை காக்க, அப்போது... ஜும்மா பயான்கள், ஆடியோ கேசட்டுகள், வீதி மேடைகள், சந்தனக்கூடு, கந்தூரி, மீலாது விழாக்கள்... என இங்கெல்லாம் ''ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு திருக்குர்ஆன் வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக தவறாக சொல்லப்பட்டு வந்தது. அவர்கள் கூறும் வசனம் எது என்று தேடிப்பார்த்தால்... அது இதுதான்..!
அல்லாஹ்வின் (ஒற்றுமை எனும்) கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்- 3: 103)
ஆனால், மேற்கண்ட வசனத்தில் பிராக்கட் போட்டு 'ஒற்றுமை'யை வலுக்கட்டாயமாக உள்ளே சொறுகித்தான் நோட்டிஸ் அடித்து பிரச்சாரம் புரிந்தார்கள். 'நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வந்தனர். (இன்னும் இப்படி வெகுசிலர் உள்ளனர்)
"ஓர் ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இஸ்லாம் தடுத்த ஒரு தீமையை செய்தால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் எப்படி கூறுவான்" என்று சிந்தித்த மக்கள் இதுவல்ல ஒற்றுமை என்று தெளியத்துவங்கினர். பிற்காலத்தில் குர்ஆன் தர்ஜுமாக்கள் வந்தவுடன், ஒற்றுமை பற்றியான அந்த வசனத்தை தேடத்துவங்கினர். அதில், ''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று தான் அவ்வசனம் கூறுவதை கண்டனர்.
இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், "அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்" என்றுதான் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பற்றி பிடியுங்கள் என்று இயம்புகின்றது.]
|
Read more...
|
Monday, 16 April 2012 19:14 |

வசிக்கும் வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், "நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்".
பல கஷ்டங்கள், பிரச்சனைகளை வெளியில் சந்தித்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள். இல்லத்திற்குள் நுழைந்த பிறகு நிம்மதி இருக்க வேண்டும்.
''வீடு கட்ட நாடினால், ஹலாலான பணத்தில் கட்டுங்கள். ஹராமான வழியில் ஈட்டிய பொருளால் கட்டாதீர்கள். அவ்வீட்டில் நிம்மதியாக இருக்க மாட்டீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கு மாறாக நடப்பவர்களுடைய சொகுசு வாழ்க்கையைக் காணும் கஷ்டவாதிகள் பொறாமைப்படுகின்றனர். அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள், "அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடக்கும் அவர்களை நீங்கள் உயர்வாகப் பார்க்கிறீர்களா?
அல்லாஹ், பயமில்லாமல் வாழக்கூடியவர்களுக்கு அனைத்து வகையான சுகபோக வாசல்களையும் அல்லாஹ் திறந்துவிடுகிறான். விட்டுப் பிடிக்கிறான். சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் ஆடி, திமிர் அதிகமாகும்போது தகுந்த நேரத்தில் இறுக்கிப் பிடிக்கிறான் (என்று கூறிவிட்டு) இந்த வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காண்பிக்கிறார்கள். "என்னுடைய பிடி கடினமான பிடி".
|
Read more...
|
Friday, 21 September 2012 19:53 |

இழப்புக்குள்ளான சமூக அந்தஸ்து...?
ஒரு அமைப்பு நிறுவனம் தன்னைப் பேசுவதற்காக அழைத்திருக்கிறது. தமக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகம் தனக்கு கௌரவப் பட்டம் தரவிருக்கிறது. பரிசுகள் பெறாதவர் வீண் மனிதர். விருது பெறாதவர் வாழத் தகுதியற்றவர். பெயருக்கு முன்னும் பின்னும் ''செந்தமிழ் முத்துமணி''. ''தமிழ்க் குன்றுமணி'' டைட்டில் இல்லையா? வெட்கக்கேடு! இத்தகைய கற்பிதங்கள், பெருமைகள் சொல், செயல், பதிவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஏதோ ஓர் வழியில் பணத்தேடல் நடக்கிறது. இரு தலைமுறை அனுபவிக்குமளவு இருப்பு சேர்ந்ததும் பயணம் சமூகத்துக்குள் அந்தஸ்து தேடுகிறது. பணத்தின் வழியாக அடைய முனைகிறது. சுய பகட்டு, தம்பட்டம், வெளிச்சத்துக்கு மனம் ஏக்கமுற்று ஆசை அலைபாய்கிறது.
சில சமூகத்தவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னம் தொலைநோக்குச் சிந்தனையுடன் ஆக்கப்பூர்வ பயனுக்கு பல நூறு ஏக்கர் நிலத்தை வளைத்தனர். வகைப்படுத்தினர். நிறுவனங்களை மக்களுக்காக, தமது சமூகத்தவருக்காக ஏற்படுத்தினர். வேர் விட்டன. விரிந்து படர்ந்தன. பரவின கிளைகள். இளைப்பாற, பயனெடுக்க படையெடுத்தனர். ஏதோ ஓர் சமூகத்தவர் உழைப்பில் மற்ற சமூகங்களும் குளிர்காய்ந்தன.
அதே காலக்கட்டத்தில் முஸ்லிம் செல்வந்தர்களும் வாழ்ந்தனர். பரவலாக பல நூறு, ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையிருப்பில் இருந்தன. சொத்துக்களுக்கு டிரஸ்ட் அமைத்து உறவினர்களை பொறுப்பாளிகளாக நியமிக்கும் போக்கும், வஃக்பு செய்தால் புண்ணியம் நினைப்புகளுமே மேலோங்கியிருந்திருக்கின்றன. மற்றோர் செயல்படுத்திக்காட்டிய தன்மைகள் உணரப்படவும், உள்வாங்கப்படவுமில்லை. மறைபெற்ற சமூகத்திலிருந்தும் கூர்மை இல்லா நிலை ஆட்கொண்டிருந்திருக்கிறது.
|
Read more...
|
Tuesday, 22 January 2013 17:51 |

குற்றங்களைப் பதியம் இடும் ஆணி வேர்களை அறுக்காமல் ஆடும் விழுதுகளை நறுக்கி என்ன பலன்?
[வயதுக்கு வந்துவிட்டால் உடன்பிறந்த சகோதரியைக் கூடத் தொட்டுப் பேச அனுமதிக்காத குடும்பப் பாங்கு இன்று மங்கிற்று. ஐரோப்பியக் கல்வியோடு, கலவியையும் இறக்குமதி செய்து மரத்துப் போனோம். சுயநலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக ஆடவர்களை மிரட்டி வாழும் சின்னத்திரை ரசிகைகளால் கலாசாரம் உயருமோ?
காப்பி குடிப்பது முதல் கக்கூஸ் கழுவுவது வரை அனைத்து விளம்பரங்களிலும் மகளிர் அணியைக் காட்டுகிறார்கள்.
நவீன நாயகியரோ உள்நாட்டைக் குட்டைப் புழுதி ஆக்கி ஆயிற்று. வெளிநாட்டு தமிழர்களையும் விட்டால்தானே. உலகு உவப்ப எங்கும் உள்ளாடை தெரிய, புறம் காட்டி ஆடுகிறார்களே. அந்த நடன சிகாமணிகளின் நிஜக்கால் குதிரை ஆட்டத்தை மகளிர் உரிமைக் குழுக்களும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
பாலியல் வன்முறையாளர்கள் பலரும் அரசியல் திமிர் பிடித்தவர்கள். சம்பந்தப்பட்ட பெண் இறந்தால் "ஆழ்ந்த இரங்கல்' தெரிவிக்கும் இயந்திரங்கள் அல்லவா?]
|
Read more...
|
Wednesday, 25 April 2012 06:20 |

குப்பைகள் - தப்பும் சரியும்
எராளமான வீட்டு உபயோகப் பொருட்களின் குப்பைகளும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளையும் மக்கள் தினமும் அலட்சியமாக கொட்டி நாம் வாழும் இந்த அழகிய பூமியை மாசுபடுத்தி வருகிறார்கள்.
வீட்டை அழகு படுத்துவதில் நாம் செலுத்தும் கவனத்தில் கொஞ்சம் நம் சுற்று சூழலைக் காப்பதிலும் செலவழித்தால் வரும் தலைமுறையினருக்கு நலமான வாழ்க்கையை விட்டுச் சென்றவர்களாக இருப்போம்.
நாம் பொறுப்பின்றி செய்யும் பல காரியங்களும் பல மடங்கு நமக்கே பாதகமாக மாறிவிடக்கூடும். மல்லாந்து கிடந்து எச்சில் துப்புவதை போன்ற இயற்கையை பாழ் படுத்தும் காரியங்கள் எவை என உணர்வதும் அதை தவிர்ப்பதும் அது பற்றிய மக்கள் விழிப்புணர்வும் மிக மிக தேவையான கால கட்டத்தில் இருக்கிறோம்.
குடி தண்ணீரை மாசுபடுத்தும் செயல்களை எங்கே கண்டாலும் எதிர்த்திடுங்கள். மக்களை பெருமளவு கொள்ளையடித்து செல்லும் நோய்கள் பெரும்பாலும் மாசுபட்ட தண்ணீராலையே பரவுகிறது. தொழிற்சாலைகள் ஈவிரக்கமின்றி அதன் கழிவுகளை ஆற்று நீரில் கலப்பதால் ஆபத்தான ரசாயனங்கள் அப்பகுதி மக்களுக்கு தலை முறை தலைமுறையாய் பாதிப்பு ஏற்படுத்தும்.
|
Read more...
|
Saturday, 24 November 2012 22:23 |

விஷப்பாம்பை இனங் கண்டுகொள்வோம்
பெரியாரின் சீடரென்று பொய்சொல்லும் கமலஹாசனின் வேடம் கலைந்துவிட்டது!
[ அமைதிப்பூங்காவாக பெயரெடுத்த தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வக்கிர நோக்கில் அவ்வப்போது திரைப்படங்கள் மூலமாக தனது ஆசையை (வெறியை) நிறைவேற்றிக்கொள்வதில் விடாமுயற்சியுடன் வேஷமிடும் கமலஹாசனின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகும் காலம் வந்துவிட்டது.
பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுவதாக அவ்வப்போது மேடைகளில் தோன்றி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்த நடிகனின் ஒட்டுமொத்த விஷமும் விஸ்வரூபம் எடுத்து ஆட ஆரம்பிக்குமுமுன் அதை தடுக்க வேண்டிய கடமை அமைதியை விரும்பும் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இந்த பாசிச வெறியனின் முகமூடியை கிழிப்பதற்காக இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.]
உன்னைப்போல் ஒருவன் - சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். "வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்" என்பதுதான் காமன்மேனின் கருத்து.
பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே "விசாரிக்காமல் சுடமுடியாது" என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.
தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த "இதுதாண்டா போலீசு" என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. அப்படிப்பட்ட 'நேர்மையான' படங்கள் பல வந்துவிட்டன.
அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.
|
Read more...
|
Thursday, 27 December 2012 21:40 |
 
கள்ளக் காதலால் சிதையும் உறவுகள்!
இந்த கட்டுரை நமக்கு உணர்த்துவது ஒன்றே ஓன்று தான்! படியுங்கள் பகிருங்கள்.
ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் கள்ளக் காதல் பற்றிய செய்திகள் வரும். இன்று அப்படியல்ல. கள்ளக் காதல் அதனால் ஏற்படும் கொலைகள், ஆள்கடத்தல், பணம் – நகை கொள்ளை போன்ற செய்திகள் முன்பைவிட பன்மடங்கு அதிகமாக வெளிவருகின்றன.
கள்ளக் காதல் விவகாரத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஈடுபடுவதால், பெண் தரப்புக் குடும்பமும் ஆண் தரப்புக் குடும்பமும் அவமானத்தில் தலை குனிகின்றன.
பல இடங்களில் கள்ளக்காதலனுடன் பெண் சென்று விடுவதால் குடும்பமே தற்கொலை செய்து கொள்வதும், ஆண்கள் கள்ளக் காதலில் சிக்கும் போது அவனைச் சார்ந்த குடும்பம் சிதைவதும், இந்தச் சமூகத்தில் நடந்தபடிதான் உள்ளன.
ஆண்டுதோறும் தேசிய குற்றவியல் புள்ளி விவரங்களில் முதலிடம் பிடித்துள்ள விவரமாக விளங்குவது. கள்ளக் காதலால் நிகழ்ந்த கொலைக் குற்றங்கள்தான். இருவேறு ஆயுதக் குழுக்களாக மோதிக் கொள்ளும் ரௌடிகள் கொலை 316 தான். ஆனால், காதல் + கள்ளக் காதலால் நடந்த கொலை மட்டும் 237.
சில இடங்களில் கள்ளக் காதல் மற்றும் காதலில் ஈடுபட்டதுபோல் நடித்துப் பெண்களைக் கடத்திச் சென்று விபச்சார விடுதிகளில் சேர்க்க முனையும் போது எதிர்க்கும் பெண்கள் மட்டும் 464 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கள்ளக் காதலன் தலைமறைவு, காதல் தோல்வி, காதலி வேறொருவரை மணமுடித்ததால் போன்றவற்றால் மட்டும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 61 பேர் இறந்துள்ளனர்.
|
Read more...
|
Monday, 31 December 2012 19:35 |
 
கற்பழிப்பு தேசமாக மாறிவரும் இந்தியா
இங்கே நமது இந்தியா ஒழுக்க கேடுகளிலும், பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்கித் தவிக்கிறது.
சமீபத்தில் தில்லியில் பேருந்து ஒன்றில் பெண் கற்பழிக்கப்பட்ட செய்தி இந்தியாவை உலுக்கியது.
ஐந்து வயது சிறுமி முதல் எழுபது வயது பாட்டி வரை வன்மமான முறையில் கற்பழிக்கப்படும் 'கற்பழிப்பு தேசமாக' இந்தியா மாறியுள்ளது.
|
Read more...
|
Saturday, 24 November 2012 07:17 |

ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (1)
அ.மார்க்ஸ் பதில்
முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து கோவில்களை சிதைத்தார்களா?
இந்துக்கள் மீது 'ஜிஸியா' என்னும் தண்டனை வரி? மத மாற்றம்?
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சி காரணம்?
போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், பேராசிரியர் அ.மார்க்ஸ்.
கேள்வி - பதில் தொகுப்பு:
இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?
வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) 'தஸ்யு'க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படை எடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள்.
ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? "ஆரியர் வருகை" எனச் சொல்லும் நம் பாட நூல்கள் "இஸ்லாமியர் படை எடுப்பு" எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.
|
Read more...
|
Tuesday, 06 November 2012 15:50 |
 
பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே பலர் தந்தைகளாக உள்ளனர்!
அண்மையில் ஒரு சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பகிர்ந்துகொள்ளவே இக்கட்டுரையை வரைகிறேன். பராஅத் என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று பொருள். அந்த நாளில் ஒருத்தி, தாய் மார்க்கமாம் இஸ்லாத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டாள். ஆம், இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள். விடுதலை பெற்றுவிட்டாள் என்று சொல்வதைவிட குஃப்ர் என்று நரகச் சிறைக்குள் விழுந்துவிடத் துணிந்துவிட்டாள் என்றுதான் கூறவேண்டும்.
அவளுடைய தந்தை ஒரு பள்ளிவாசலின் செயலாளர் என்பது மிகவும் வியப்புக்குரியது. ஆம், அவளுடைய தந்தைக்கு அவளுடன் சேர்த்து நான்கு பெண்பிள்ளைகள். அவள் மூன்றாமவள்.
அவளுடைய தந்தை, வீட்டில் தம் பிள்ளைகளையோ, மனைவியையோ தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை.
தம் பெண் பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவில்லை. இஸ்லாத்தைப் போதிக்கவில்லை.
மாறாக, அவர் கண்டித்ததெல்லாம், பள்ளிவாசலில் அமைதியாக மார்க்கப் பணியாற்றும் ஆலிம்களைத்தான்.
|
Read more...
|
Monday, 29 October 2012 21:34 |


ஆடை மறைப்பதற்கா? திறப்பதற்கா?
மனித இனத்தின் பெரும்பகுதி இரண்டு உந்துதல்களுக்கிடையே சிக்கியுள்ளது
1. தன்னை மறைக்க வேண்டும் என்ற வெட்க உணர்வு
2. தன்னை வெளிக்காட்ட வேண்டும் என்ற உணர்வு
அதாவது தன்னை மறைப்பதா? அல்லது திறப்பதா?
இது ஏன்? என்ன நடந்துகொண்டிருக்கிறது?
அறிவியல் இதற்கு பதில் கூற முடியாது . அது இந்த சிந்தனைகளின் ஊற்றை ஊடுருவிப்பார்க்க முடியாது .
மேலும் விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளில் அதிகமானவைகள் சார்லஸ் டார்வின் என்பவரின் அடிவருடிகளின் ஆதிக்கத்திலும், ஆளுமையிலுமே இருக்கிறது .
டார்வினிஸம் என்பது ஒரு நம்பிக்கையே அன்றி அது ஒரு விஞ்ஞானம் அல்ல.
|
Read more...
|
Monday, 22 February 2021 07:36 |

சந்தேகப் பிடியில் மனம்
ரஹமத் ராஜகுமாரன்
வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் நீளமான ஒரு கருப்பு முடியை பார்க்கிறாள் அவரது மனைவி. அவ்வளவுதான்...பூகம்பமே வெடிக்கிறது.
"உங்களுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவள் முல்லாவிடம் சண்டை பிடிக்கிறாள்.
"ஜன நடமாட்டம் நிறைந்த சந்தையின் வழியாக வந்தேன். அப்போது என் ஆடையில் இந்த முடி எப்படியோ ஒட்டியிருக்கும்" - முல்லாவின் பதில் மனைவி அதை நம்பவில்லை கண்ணீர் விட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள்.
அடுத்தநாள்.. வேலையில் இருந்து வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் ஒரு நரைத்த முடி!
"அய்யய்யோ... நேற்று இளம்பெண் இன்று தலை நரைத்த பெண்ணா? உங்களால் என் வாழ்க்கையே பறி போய்விட்டது என்று தரையில் விழுந்து புரண்டு அழுதாள்.
அதற்கு அடுத்த நாள் வீடு திரும்பும்போது, முல்லாவுக்கு மனவி நினைவு வருகிறது. ஆடைகளை நன்கு உதறிவிட்டு வீட்டுக்குள் வருகிறார். முல்லாவின் மனைவி இவரது இவரின் ஆடைகளை பரபரவென்று சோதனை போடுகிறாள் எந்த முடியும் கிடைக்கவில்லை.
|
Read more...
|
Tuesday, 20 August 2013 05:59 |

அன்பைக்காட்ட ஆயிரம் வழிகள்
மண்ணில் உள்ளோரை நீங்கள் நேசித்தால் விண்ணில் உள்ளவன் உங்களை நேசிப்பான் என்பது பிரபலாமான நபிமொழி. அவ்வாறு அன்புகாட்டுதல் ஒவ்வொரு இறைவிசுவாசிக்கும் கடமை ஆக்கப்பட்டுள்ளது.
அன்பு காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை
திருக்குர்ஆன் 4:36. மேலும், இறைவனையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக இறைவன் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை
வறுமையின்போதும் அன்பு!
திருக்குர்ஆன் 3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
|
Read more...
|
|
|